”தமிழ்நாட்டை விட்டுவிடுங்கள்!” : முதல்வர் மு.க.ஸ்டாலின் | செய்திகள்: சில வரிகளில...
நியூஸி. டி20 தொடர்: பாகிஸ்தான் அணியில் முக்கிய வீரர்கள் நீக்கம்!
நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் முக்கிய வீரர்களான கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் நட்சத்திர ஆட்டக்காரர் பாபர் அசாம் இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். டி20 அணிக்கு புதிய கேப்டனாக இளம் வீரர் சல்மான் அலி அகாவும், துணைக் கேப்டனாக சதாப் கானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் மாற்றமா?
நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் சொந்த மண்ணில் நடந்த போட்டியிலேயே ஒரு வெற்றிகூட பெறாமல் வெளியேறியது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. இதனால் டி20 கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரிஸ்வான் ஒருநாள் அணியின் கேப்டனாக தொடர்கிறார்.
இருப்பினும், பாபர் அசாம் ஒருநாள் அணிக்கு அழைக்கப்பட்ட நிலையில் சௌத் சாகீல், கம்ரான் குலாம் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தவிர்த்து சாகீன் ஷா அப்ரிடி, ஹாரீஸ் ராஃப் இருவரும் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் பாகிஸ்தான் அணி மார்ச் 16 ஆம் தேதி தொடங்கும் 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இதையும் படிக்க:இந்திய அணிக்கு தலைவலி: காரணம் டிராவிஸ் ஹெட்-‘ஏக்’ -தினேஷ் கார்த்திக் சொல்வதென்ன?