செய்திகள் :

நியூஸி. டி20 தொடர்: பாகிஸ்தான் அணியில் முக்கிய வீரர்கள் நீக்கம்!

post image

நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் முக்கிய வீரர்களான கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் நட்சத்திர ஆட்டக்காரர் பாபர் அசாம் இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். டி20 அணிக்கு புதிய கேப்டனாக இளம் வீரர் சல்மான் அலி அகாவும், துணைக் கேப்டனாக சதாப் கானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் மாற்றமா?

நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் சொந்த மண்ணில் நடந்த போட்டியிலேயே ஒரு வெற்றிகூட பெறாமல் வெளியேறியது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. இதனால் டி20 கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரிஸ்வான் ஒருநாள் அணியின் கேப்டனாக தொடர்கிறார்.

இருப்பினும், பாபர் அசாம் ஒருநாள் அணிக்கு அழைக்கப்பட்ட நிலையில் சௌத் சாகீல், கம்ரான் குலாம் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தவிர்த்து சாகீன் ஷா அப்ரிடி, ஹாரீஸ் ராஃப் இருவரும் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் பாகிஸ்தான் அணி மார்ச் 16 ஆம் தேதி தொடங்கும் 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இதையும் படிக்க:இந்திய அணிக்கு தலைவலி: காரணம் டிராவிஸ் ஹெட்-‘ஏக்’ -தினேஷ் கார்த்திக் சொல்வதென்ன?

நியூசி.க்கு எதிரான தொடரில் இவரே தலைமைப் பயிற்சியாளராக தொடர்வார்: பாக். கிரிக்கெட் வாரியம்

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஆக்யூப் ஜாவத் செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

336* கேட்சுகள்.. விராட் கோலி புதிய சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்து ராகுல் டிராவிட் சாதனையை முறியடித்தார் விராட் கோலி.சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டா... மேலும் பார்க்க

முதல் அரையிறுதி: இருவர் அரைசதம்; இந்தியாவுக்கு 265 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 264 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் முத... மேலும் பார்க்க

கையில் கறுப்பு பட்டையுடன் களமிறங்கிய இந்திய அணி! ஏன்?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிவரும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் கையில் கறுப்பு பட்டைகளுடன் விளையாடினர்.சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுத... மேலும் பார்க்க

உள்ளூர் கிரிக்கெட் ஜாம்பவான் பத்மகர் ஷிவல்கர் காலமானார்!

உள்ளூர் கிரிக்கெட் ஜாம்பவானான பத்மகர் ஷிவல்கர் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84.சர்வதேச அளவில் இந்திய அணிக்காக விளையாடாவிட்டாலும், உள்ளூர்ப் போட்டிகளில் கோலோச்சிய பத்மகர் ஷிவல்கர் கிரிக... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் மாற்றமா?

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் முதல... மேலும் பார்க்க