செய்திகள் :

பேரவைக்குள் பான்மசாலா போட்டுத் துப்பிய எம்எல்ஏ! தலைவர் எச்சரிக்கை!

post image

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்குள் பான்மசாலா போட்டுத் துப்பிய எம்எல்ஏவுக்கு பேரவைத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. மாநில நிதியமைச்சர் சுரேஷ் குமார் கன்னா கடந்த பிப். 20 ஆம் தேதி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

இதையும் படிக்க : டிஜிட்டல் இந்தியாவில் கையால் 100 பக்க பட்ஜெட்டை எழுதிய நிதியமைச்சர்! யார் அவர்?

இந்த நிலையில், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்குள் பான்மசாலா சாப்பிட்ட உறுப்பினர் ஒருவர், அங்கேயே எச்சில் துப்பிய சம்பவம் குறித்து பேரவைத் தலைவர் சதீஸ் மஹானாவுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்தை பார்வையிட்ட பேரவைத் தலைவர் இன்றைய கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக உறுப்பினர்களிடம் இதைப் பற்றி பேசினார்.

“பேரவைக்குள் எச்சில் துப்பிய எம்எல்ஏ யாரென்று விடியோ மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், அனைவரின் முன்னிலையிலும் அவரின் பெயரைச் சொல்லி அவமானப்படுத்த விரும்பவில்லை.

இதுபோன்ற செயலில் யாரேனும் ஈடுபடுவதை மற்றவர்கள் கண்டால், அவர்களை தடுக்க வேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களிடமும் கேட்டுக் கொள்கிறேன். பேரவையை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நமது பொறுப்பு.

சம்பந்தப்பட்ட உறுப்பினரே என்னிடம் தனிப்பட்ட முறையில் வந்து ஒப்புக்கொண்டால் நல்லது. இல்லையெனில், அவரை நானே அழைப்பேன்” எனத் தெரிவித்தார்.

தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்ற மகன்!

ஒடிசாவில் தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற மகனை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தின் சந்துவா கிராமத... மேலும் பார்க்க

திருப்பதி தேவஸ்தான அறைகள் பெற புதிய விதி: தரிசன டிக்கெட் இருந்தால்தான்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தங்கும் அறைகள் ஒதுக்கீட்டில் புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.திருமலை திருப்பதி ஏழும... மேலும் பார்க்க

மூடநம்பிக்கை: பச்சிளம் குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த கொடூரம்!

ஒடிசா மாநிலத்தின் நபரங்பூரில் பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தின் ஹண்டல்படா கிராமத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

ஆறு ஆண்டுகளாக நிரப்பப்படாத மக்களவைத் துணைத் தலைவர் பதவி!

18-ஆவது மக்களவை தொடங்கி 9 மாதங்கள் ஆகியும், இதுவரை அவையின் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது.17-ஆவது மக்களவை முழுவதும் துணைத் தலைவர் பதவி நிரப்பப்... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் ஓர் ஆசிரியர் பள்ளிகள் இத்தனையா?

ஜார்க்கண்டில் 8 ஆயிரம் அரசுப் பள்ளிகள் தலா ஒரு ஆசிரியருடன் செயல்படுவதாக கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் தெரிவித்தார்.ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில், ஆசிரியர்கள... மேலும் பார்க்க

சலவைத் தொழிலும் தொழிற்சாலை சட்டத்தின் கீழ் வரும்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: துணிகளை துவைத்து உலர்த்தி தரும் தொழிலானது, உற்பத்தி துறை என்ற அடிப்படையில், தொழிற்சாலை சட்டத்தின் கீழ் தகுதி பெறுகிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.முக்கிய வழக்கு ஒன்றில் குறிப்ப... மேலும் பார்க்க