செய்திகள் :

17 வயது சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த ஆண் நண்பர்!

post image

மும்பையில் 17 வயது சிறுமி அவரது ஆண் நண்பரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மும்பையின் அந்தேரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜித்து தம்பே என்கிற 30 வயது நபர் ஒருவர் நண்பராக இருந்துள்ளார்.

இவர்கள் இருவரும் சில மாதங்களாக நண்பர்களாக இருந்த நிலையில் அவர்கள் வசிக்கும் பகுதியில் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.

இருவரும் காதலிப்பதாக நினைத்து அந்தச் சிறுமியின் தாயார் வினவியபோது சிறுமி இல்லையென்று மறுத்தார். பின்னர், ஜித்துவிடம் இனிமேல் தனது பெண்ணைச் சந்தித்துப் பேசவேண்டாம் என சில நாள்களுக்கு முன் கூறியுள்ளார்.

இதையும் படிக்க | ஹரியாணா காங்கிரஸ் பெண் தொண்டர் கொல்லப்பட்ட அன்று என்ன நடந்தது?

இந்த நிலையில், கடந்த ஞாயிறன்று (மார்ச் 2) மரோல் காந்தன் பகுதியில் இரவு 11.30 மணியளவில் தனது வீட்டிற்கு அருகில் அந்தச் சிறுமி தனது தோழிகளுடன் இரவு உணவு முடித்துவிட்டு பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜித்து, திடீரென தனது கையில் வைத்திருந்த பெட்ரோலை அந்தச் சிறுமியின் மீது ஊற்றி தீவைத்ததாகக் கூறப்படுகிறது.

இதில் முகம், கழுத்து, கைகள், கால்கள் என உடலில் 60% இடங்களில் அந்தச் சிறுமிக்கு தீக்காயங்கள் ஏற்பட்டது.

பதறிய நிலையில் உடனடியாக அங்கு வந்த அவரது தாய் தீக்காயங்களுடன் கிடந்த தனது மகளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். பாதிக்கப்பட்ட சிறுமி பேச முடியாத நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையில் அவர் அளித்தப் புகாரின் பேரில் ஜித்து மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பெட்ரோல் ஊற்றி எரிக்கையில் அவருக்கும் காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

காவல்துறையில் அளித்தப் புகாரில், அந்தச் சிறுமி மருத்துவமனையில் தனது தாயிடம் “என் மீது எந்தத் தவறும் இல்லை. ஜித்து தான் என்மீது பெட்ரோல் ஊற்றி எரித்தான்” எனக் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது கொலை முயற்சி, திரவம் வீசி கடுமையான காயங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டில் ஓர் ஆசிரியர் பள்ளிகள் இத்தனையா?

ஜார்க்கண்டில் 8 ஆயிரம் அரசுப் பள்ளிகள் தலா ஒரு ஆசிரியருடன் செயல்படுவதாக கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் தெரிவித்தார்.ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில், ஆசிரியர்கள... மேலும் பார்க்க

சலவைத் தொழிலும் தொழிற்சாலை சட்டத்தின் கீழ் வரும்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: துணிகளை துவைத்து உலர்த்தி தரும் தொழிலானது, உற்பத்தி துறை என்ற அடிப்படையில், தொழிற்சாலை சட்டத்தின் கீழ் தகுதி பெறுகிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.முக்கிய வழக்கு ஒன்றில் குறிப்ப... மேலும் பார்க்க

பேரவைக்குள் பான்மசாலா போட்டுத் துப்பிய எம்எல்ஏ! தலைவர் எச்சரிக்கை!

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்குள் பான்மசாலா போட்டுத் துப்பிய எம்எல்ஏவுக்கு பேரவைத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. மாநில நிதியம... மேலும் பார்க்க

அதிக உடல் எடையால் இந்தியாவில் மூன்றில் ஒருவர் பாதிக்கப்படும் அபாயம்!

இந்திய மக்கள்தொகையில் மூன்றில் ஒருபங்கினர் 2050-இல் அதிக உடல் எடையால் அவதியுறுவர் என்கிறது சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று.2050-ஆம் ஆண்டு காலகட்டத்தில், இந்தியாவில் அதீத உடல் எடையால் அவதியுறும் மக்கள்தொகை ... மேலும் பார்க்க

உ.பி.: மதமாற்றத்தில் ஈடுபட்ட நபர் மீது வழக்குப்பதிவு!

உ.பி.யில் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபட்டதாக ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஷ்ரவஸ்தி நகரிலுள்ள பக்வான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ் சிங். கடந்த சில ஆண்டுகளாக பஞ்... மேலும் பார்க்க

ஆன்லைன் விளையாட்டுக்குத் தடை விதித்த பெற்றோர், சகோதரியைக் கொன்ற இளைஞர்!

ஒடிசாவின் ஜகத்சிங்பூரில் ஆன்லைன் விளையாட்டுக்குத் தடை விதித்த பெற்றோர், சகோதரியைக் கொன்ற இளைஞரால் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜகத்சிங்பூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜெயபாடா சேத்தி சா... மேலும் பார்க்க