செய்திகள் :

உ.பி.: மதமாற்றத்தில் ஈடுபட்ட நபர் மீது வழக்குப்பதிவு!

post image

உ.பி.யில் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபட்டதாக ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஷ்ரவஸ்தி நகரிலுள்ள பக்வான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ் சிங். கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாபில் வசித்த இவர் அவ்வப்போது தனது கிராமத்திற்கு வருவார்.

சமீபத்தில் அவர் உ.பி. கிராமத்திற்கு வந்தபோது ஒரு வீட்டில் கிறித்தவ மதக் கடவுளான இயேசுவின் பெயரில் நோய்களைச் குணப்படுத்தும் சடங்குகளைச் செய்யும் கூட்டம் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும் வெளி கிராமத்தினர்.

இதுகுறித்த காணொளிகள் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரால் வெளியிடப்பட்டது. மேலும், அந்த நபர் நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறி சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இதையும் படிக்க | ஆன்லைன் விளையாட்டுக்குத் தடை விதித்த பெற்றோர், சகோதரியைக் கொன்ற இளைஞர்!

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உத்தரப் பிரதேசத்தின் சட்டவிரோத மதமாற்றத் தடைச்சட்டம் 2021-ன் கீழ் ஹரீஷ் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை எனக் குறிப்பிட்ட காவல்துறையினர், பஞ்சாப்புக்குத் தப்பித்துச் சென்றிருக்கலாம் என்று கூறியுள்ளனர். அவரைத் தேடி காவல்துறை குழு அங்கு அனுப்பப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், அவர் இருந்த கிராமம் நேபாளத்தின் எல்லைக்கு அருகில் இருப்பதால் அவர் எல்லை வழியே தப்பித்துச் செல்லாமல் இருக்க அங்கும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

மூடநம்பிக்கை: பச்சிளம் குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த கொடூரம்!

ஒடிசா மாநிலத்தின் நபரங்பூரில் பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தின் ஹண்டல்படா கிராமத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

ஆறு ஆண்டுகளாக நிரப்பப்படாத மக்களவைத் துணைத் தலைவர் பதவி!

18-ஆவது மக்களவை தொடங்கி 9 மாதங்கள் ஆகியும், இதுவரை அவையின் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது.17-ஆவது மக்களவை முழுவதும் துணைத் தலைவர் பதவி நிரப்பப்... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் ஓர் ஆசிரியர் பள்ளிகள் இத்தனையா?

ஜார்க்கண்டில் 8 ஆயிரம் அரசுப் பள்ளிகள் தலா ஒரு ஆசிரியருடன் செயல்படுவதாக கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் தெரிவித்தார்.ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில், ஆசிரியர்கள... மேலும் பார்க்க

சலவைத் தொழிலும் தொழிற்சாலை சட்டத்தின் கீழ் வரும்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: துணிகளை துவைத்து உலர்த்தி தரும் தொழிலானது, உற்பத்தி துறை என்ற அடிப்படையில், தொழிற்சாலை சட்டத்தின் கீழ் தகுதி பெறுகிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.முக்கிய வழக்கு ஒன்றில் குறிப்ப... மேலும் பார்க்க

பேரவைக்குள் பான்மசாலா போட்டுத் துப்பிய எம்எல்ஏ! தலைவர் எச்சரிக்கை!

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்குள் பான்மசாலா போட்டுத் துப்பிய எம்எல்ஏவுக்கு பேரவைத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. மாநில நிதியம... மேலும் பார்க்க

அதிக உடல் எடையால் இந்தியாவில் மூன்றில் ஒருவர் பாதிக்கப்படும் அபாயம்!

இந்திய மக்கள்தொகையில் மூன்றில் ஒருபங்கினர் 2050-இல் அதிக உடல் எடையால் அவதியுறுவர் என்கிறது சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று.2050-ஆம் ஆண்டு காலகட்டத்தில், இந்தியாவில் அதீத உடல் எடையால் அவதியுறும் மக்கள்தொகை ... மேலும் பார்க்க