செய்திகள் :

2018-ல் காவலரைத் தாக்கிய மருத்துவருக்கு அபராதம்!

post image

மகாராஷ்டிரத்தில் போக்குவரத்துக் காவலரைத் தாக்கிய மருத்துவருக்கு தாணே மாவட்ட நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

தாணேவில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 அன்று மருத்துவர் ஒருவர் தவறான வழியில் தனது காரை நிறுத்தியதினால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அப்போது, அங்கு பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர் அந்த மருத்துவரின் ஓட்டுநர் உரிம அட்டையை கேட்டுள்ளார். அதற்கு அந்த மருத்துவர் மறுத்ததுடன், அந்த காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கீழே தள்ளியதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க:ஜார்க்கண்டில் ஓர் ஆசிரியர் பள்ளிகள் இத்தனையா?

இதனைத் தொடர்ந்து, அந்த மருத்துவரின் மீது கோப்ரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது கடந்த மார்ச் 1 அன்று தாணே மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி வசுதா எல் போஸலேவின் முன் விசாரணைக்கு வந்துள்ளது.

அப்போது, ஆஜரான நான்கு சாட்சிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தற்காகவும், போக்குவரத்து விதிகளை மீறியதற்காகவும் தற்போது 43 வயதாகும் அந்த மருத்துவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு ரூ.5,600 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தீர்ப்பின் நகலானது இன்று (மார்ச் 4) வெளியிடப்பட்டுள்ளது.

செர்பியா மக்களவையில் அமளி! புகைக்குண்டு வீச்சில் 3 உறுப்பினர்கள் காயம்!

செர்பியா நாட்டு மக்களவையில் எதிர் கட்சியினர் வீசிய கண்ணீர் மற்றும் புகைக்குண்டுகளினால் சுமார் 3 மக்களவை உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர். செர்பியா நாட்டு மக்களவியில் அந்நாட்டு பல்கலைக்கழகக் கல்விக்கான ந... மேலும் பார்க்க

காவல் உயர் அதிகாரி வீட்டு வாசலில் 80 வயது முதியவர் கொலை!

ஒடிசாவில் காவல் உயர் அதிகாரி வீட்டின் வாசலின் முன்பு 80 வயது முதியவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். நுவாபாடா மாவட்டத்தின் சிர்டோல் கிராமத்தைச் சேர்ந்த சுக்லால் சாஹு (வயது 80) எனும் முதியவர், நேற்று... மேலும் பார்க்க

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு!

சீனாவின் தன்னாட்சி பகுதியான திபெத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 5 கி.மீ ஆழத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று (மார்ச்.4)... மேலும் பார்க்க

24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய நபர் மரணம்!

24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (வயது 88),14 வயது சிறுவனாக இரு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்காரர்களை தண்டிப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது: அமித் ஷா

புதுதில்லி: போதைப் பொருள்கள் மற்றும் அவை கடத்தப்படுவதற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருவதாகவும், போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை எந்தத் தளா்வும் இல்லாமல் தொ... மேலும் பார்க்க

தனியார் துறையில் இடஒதுக்கீடு கோரி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்: திருமாவளவன்

சென்னை: தனியாரை மையப்படுத்த வேண்டாம் என்று போராடிய நாம், தனியார் துறையில் இட ஒதுக்கீடு கோரி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம் என விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவி... மேலும் பார்க்க