செய்திகள் :

சூடான்: 221 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த ராணுவ வீரர்கள்!

post image

சூடானில் கடந்த ஓராண்டில் மட்டும் ஆயுதப் படையினரால் 221 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐ.நா.வுக்கான குழந்தைகள் நிறுவனம் செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

வட ஆப்பிரிக்க நாடுகளில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படுவோர்கள் குறித்த தகவல் சேகரிக்கும் நிறுவனம் அளித்த அறிக்கை அடிப்படையில் 221 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த எண்ணிக்கை அதிகளவில் இருக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா!

கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் சூடான் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே போர் உருவானது. நாடு முழுவதும் இரு படைகளும் சண்டை போட்டுக் கொண்டதில் 20,000-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

இந்த உள்நாட்டுப் போரின் காரணமாக 1.4 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்களின் வீடுகளில் இருந்து நாட்டின் பல்வேறு பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

யுனிசெஃப்பின் அறிக்கைபடி, போர் தொடங்கியதில் இருந்து உள்நாட்டுக்குள் சுமார் 61,800 குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளன.

போரின்போது இரு படையினரும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்வது, கட்டாய குழந்தை திருமணம் செய்வது போன்ற குற்றங்களில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியன் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட குழந்தைகளின் 30 சதவிகிதம் பேர் ஆண் குழந்தைகளாகும். 5 வயதுக்குள்பட்ட 16 குழந்தைகளும், 4 பச்சிளம் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

கெடாரெஃப், கஸ்ஸாலா, கெசீரா, கார்ட்டூம், நதி நைல், தெற்கு கோர்டோஃபான், வடக்கு டார்பர் மற்றும் மேற்கு டார்பர் ஆகிய மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன.

மேலும், பலர் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்றும், ஆயுதக் குழுக்களின் பழிவாங்கல் நடவடிக்கைக்கு பயந்து புகார் தெரிவிக்க தயங்குவதாகவும் ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மனைவியை சமாளிப்பது எப்படி? கபிங்காவிடம் கேளுங்கள்!

ஒரே ஒரு மனைவியை சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் நண்பர்களிடமும் கூகுளிலும் உபாயங்கள் தேடிக்கொண்டிருப்பவர்கள், தான்சானியாவைச் சேர்ந்த கபிங்காவைப் பற்றி நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்.கபிங்கா சப்தமே இ... மேலும் பார்க்க

போப் உடல்நிலையில் பின்னடைவு!

ரோம் : போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து வாடிகன் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, அவருக்கு மீண்டும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.போப் பிரான்சிஸ்(88) முச்ச... மேலும் பார்க்க

கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கான வரி விதிப்பு நடவடிக்கை அமல்!

ஒட்டாவா : கனடாவில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் நடவடிக்கை செவ்வாய்க்கிழமை(மார்ச் 4) நள்ளிரவு 12.01 மணியிலிருந்து அமலுக்கு வந்திருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ... மேலும் பார்க்க

உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா!

உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.ஸெலென்ஸ்கி - டிரம்ப் காரசார விவாதத்தின் எதிரொலியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

ஜொ்மனி: காா் தாக்குதலில் 2 போ் உயிரிழப்பு

பொ்லின்: ஜொ்மனியின் மேற்குப் பகுதி நகரான மேன்ஹைமில் கூட்டத்தினரிடையே 50 வயது நபா் காரை ஓட்டிச் சென்று திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா். ஜொ்மனியைச் சோ்ந்த அந்தக் காா் ஓட்டுநரை ப... மேலும் பார்க்க

தாக்குதலை நிறுத்தினால்தான் பேச்சுவாா்த்தை: ஸெலென்ஸ்கி

லண்டன்: தங்கள் மீதான தாக்குதலை ரஷியா நிறுத்தினால்தான் அந்த நாட்டுடன் போா் நிறுத்த பேச்சுவாா்த்தை மேற்கொள்ள முடியும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி நிபந்தனை விதித்துள்ளாா். இது குறித்து அவா... மேலும் பார்க்க