செய்திகள் :

கர்நாடக உள்கட்சிப் பூசல்: கார்கேவுடன் சிவக்குமார் ஆலோசனை!

post image

கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் உள்கட்சிப் பூசல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தினார்.

டி.கே. சிவக்குமார் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது என்று கர்நாடக அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்த கருத்து மாநில ஆளுங்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய முதல்வர் சித்தராமையா, அமைச்சர் வீரப்ப மொய்லி அல்லது வேறு தலைவர்களின் கருத்துகள் முக்கியமல்ல, தலைமைதான் முடிவெடுக்கும், அதன்படி செயல்படுவோம் எனத் தெரிவித்தார்.

துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரும், காங்கிரஸ் தலைவர் முதல்வர் விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்ற சிவக்குமார், அவருடன் ஆலோசனை நடத்தினார்.

இதையும் படிக்க : முதல்வராகிறாரா சிவக்குமார்? கர்நாடக அமைச்சர், எம்எல்ஏக்கள் பேச்சால் சர்ச்சை!

உள்கட்சிப் பூசல்

கடந்த 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற போதே, சித்தராமையா மற்றும் சிவக்குமார் ஆகியோரில் யார் முதல்வர் என்ற கேள்வி நிலவியது.

தலைமையின் பேச்சுவார்த்தையை சிவக்குமார் ஏற்றுக்கொண்ட நிலையில், முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக சிவக்குமாரும் பொறுப்பேற்றனர்.

இந்த நிலையில், முடா வழக்கில் சித்தராமையாவை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தம் கொடுத்ததால், அடுத்த முதல்வர் சிவக்குமார் என்ற பேச்சு மீண்டும் எழுந்தது.

”கர்நாடகத்தின் முதல்வராக வருகின்ற டிசம்பருக்குள் சிவக்குமார் பொறுப்பேற்பார்” என்று காங்கிரஸ் எம்எல்ஏ பசவராஜு வி சிவகங்கா ஞாயிற்றுக்கிழமை காலை தெரிவித்திருந்தார்.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள், “டி.கே.சிவக்குமார் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது, அவரது உழைப்புக்கு கிடைத்தது இந்த பதவி, பரிசாக அல்ல” என்று அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

சிவக்குமார் ஆதரவாளர்களின் கருத்தால் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.

அதிக உடல் எடையால் இந்தியாவில் மூன்றில் ஒருவர் பாதிக்கப்படும் அபாயம்!

இந்திய மக்கள்தொகையில் மூன்றில் ஒருபங்கினர் 2050-இல் அதிக உடல் எடையால் அவதியுறுவர் என்கிறது சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று.2050-ஆம் ஆண்டு காலகட்டத்தில், இந்தியாவில் அதீத உடல் எடையால் அவதியுறும் மக்கள்தொகை ... மேலும் பார்க்க

உ.பி.: மதமாற்றத்தில் ஈடுபட்ட நபர் மீது வழக்குப்பதிவு!

உ.பி.யில் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபட்டதாக ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஷ்ரவஸ்தி நகரிலுள்ள பக்வான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ் சிங். கடந்த சில ஆண்டுகளாக பஞ்... மேலும் பார்க்க

ஆன்லைன் விளையாட்டுக்குத் தடை விதித்த பெற்றோர், சகோதரியைக் கொன்ற இளைஞர்!

ஒடிசாவின் ஜகத்சிங்பூரில் ஆன்லைன் விளையாட்டுக்குத் தடை விதித்த பெற்றோர், சகோதரியைக் கொன்ற இளைஞரால் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜகத்சிங்பூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜெயபாடா சேத்தி சா... மேலும் பார்க்க

பூனையின் இறப்பால் துக்கம் தாளாமல் பெண் தற்கொலை: உ.பி.யில் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேசத்தில் பூனையின் இறப்பால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூஜா(32). இவர் கடந்த எட்டு ஆண்டுகள... மேலும் பார்க்க

மாதவி புச் மீதான நடவடிக்கைக்கு 4 வாரம் தடை: மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை: பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவா் மாதவி புரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக நான்கு வாரங்களுக்கு நடவடிக்கை எடுக... மேலும் பார்க்க

டிஜிட்டல் இந்தியாவில் கையால் 100 பக்க பட்ஜெட்டை எழுதிய நிதியமைச்சர்! யார் அவர்?

ராய்ப்பூர்: டிஜிட்டல் ஆதிக்க சகாப்தத்தில், 100 பக்க பட்ஜெட்டை கையால் எழுதி தாக்கல் செய்துள்ளார் சத்தீஸ்கர் நிதியமைச்சரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஓ.பி. செளத்ரி.முழு பட்ஜெட்டையும் தானே கையால் எழுதி... மேலும் பார்க்க