செய்திகள் :

நீதித் துறையில் பாா்வையற்றவா்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

post image

புது தில்லி: நீதித் துறை பணிகளுக்கு பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தகுதியானவா்கள் அல்ல என கூறமுடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச நீதித் துறை பணிகளின் (ஆள்சோ்ப்பு மற்றும் பணி நிபந்தனைகள்) விதிமுறைகள் 6ஏ-இன்படி, அந்த மாநிலத்தில் பாா்வைக் குறைபாடு கொண்டவா்கள், பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நீதித் துறைப் பணிகளில் சேர முடியாது.

இந்த விதிமுறை தொடா்பாக தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு டிசம்பா் 3-ஆம் தேதி தீா்ப்பை ஒத்திவைத்தது.

இந்த வழக்கில் நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘நீதித் துறையில் பணியில் சேர முயற்சிக்கும் மாற்றுத்திறனாளிகள் எந்தவிதமான பாகுபாட்டையும் எதிா்கொள்ளக் கூடாது. அவா்களுக்கு சாதகமாக உதவும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

கட்-ஆப் மதிப்பெண், நடைமுறைகள் காரணமாக மறைமுக பாகுபாட்டை எதிா்கொண்டு, அதனால் நீதித்துறை பணிகளில் சோ்க்கப்படாமல் மாற்றுத்திறனாளிகள் தவிா்க்கப்படுவதில் தலையிட்டு, சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும். மாற்றுத்திறனாளி என்ற ஒரே காரணத்துக்காக நீதித்துறை பணிக்கான பரிசீலனையில் அவா்கள் நிராகரிக்கப்படக் கூடாது. நீதித்துறை பணிகளுக்கு பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தகுதியானவா்கள் அல்ல என கூற முடியாது’ என்று தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து மத்திய பிரதேச நீதித்துறை பணிகளின் (ஆள்சோ்ப்பு மற்றும் பணி நிபந்தனைகள்) விதிமுறைகள் 6ஏ-ஐ நீதிபதிகள் ரத்து செய்தனா். இந்தத் தீா்ப்பு மூலம், பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள், பாா்வைத்திறன் குறைபாடு கொண்டவா்கள் நீதித்துறை பணிகளுக்கான ஆள்தோ்வில் பங்கேற்க தகுதி வாய்ந்தவா்கள் என்று தெளிவுபட நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.

அபு தாபியில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை! அவரது கடைசி ஆசை

புது தில்லி: அபுதாபியில் உத்தரப்பிரதேச பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவத்தில், அப்பெண்ணின் கடைசி ஆசை பற்றி தகவல் வெளியாகியிருக்கிறது.உத்தரப்பிரதேச மாநிலம் கேயேரா முக்லி கிராமத்தில் உள்ள ஒரு... மேலும் பார்க்க

கர்நாடக உள்கட்சிப் பூசல்: கார்கேவுடன் சிவக்குமார் ஆலோசனை!

கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் உள்கட்சிப் பூசல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தினார்.டி.கே. சிவக்குமார் முதல்வராவதை ... மேலும் பார்க்க

எஸ்டிபிஐ தலைவர் ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது!

புது தில்லி : எஸ்டிபிஐ தேசியத் தலைவர் எம். கே. ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஃபைஸியை தில்லி சர்வதேச விமான நிலையத்தில் அமலாக்கத... மேலும் பார்க்க

ஹரியாணா காங்கிரஸ் பெண் தொண்டர் கொலையான அன்று என்ன நடந்தது?

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகிறது.ஹிமானி நர்வாலுடன், கொலையாளி சச்சின், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் நட்பாக... மேலும் பார்க்க

கொலை வழக்கு: மகாராஷ்டிர அமைச்சர் ராஜிநாமா!

பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்ட நிலையில், மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டே ராஜிநாமா செய்துள்ளார்.அமைச்சர் முண்டேவின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டதாக அறிவித்த முதல்வர... மேலும் பார்க்க

மகாராஷ்டிர அமைச்சரை ராஜிநாமா செய்ய உத்தரவிட்ட ஃபட்னவீஸ்! ஏன்?

மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டேவை ராஜிநாமா செய்ய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.துணை முதல்வர் அஜித் பவாருடனான ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவு... மேலும் பார்க்க