செய்திகள் :

பகுஜன் சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு எதிராக பாஜக சதி: ராகுல் கண்டனம்!

post image

பகுஜன் சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு எதிராக பாஜக சதி செய்து வருவதாக ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான காலியாக உள்ள இடஒதுக்கீடு பதவிகள் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மோடி அரசை தாக்கிப் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக அவருடைய எக்ஸ் பதிவில்,

நாடாளுமன்றத்தில் மோடி அரசு முன்வைத்த புள்ளி விரவங்கள் பகுஜன்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதற்கும், நிறுவன ரீதியான மனுவாதம் இருப்பதற்கும் உறுதியான சான்றாகும்.

மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்டி-களுக்கான பேராசிரியர் பதவிகளில் 83 சதவீதமும், ஓபிசிகளுக்கான 80 சதவீதமும், எஸ்சிகளுக்கான 64 சதவீதமும் வேண்டுமென்றே காலியாக வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதே நேரத்தில், எஸ்டி-களுக்கான உதவிப் பேராசிரியர் பதவிகளில் 65 சதவீதமும், ஓபிசி-களுக்கான 69 சதவீதமும், எஸ்சி-களுக்கான 51 சதவீதமும் காலியாக விடப்பட்டுள்ளன.

இது வெறும் அலட்சியம் மட்டுமல்ல.. பகுஜன் சமூகத்தை ஆராய்ச்சி மற்றும் கொள்கைகளிலிருந்து விலக்கி வைப்பதற்கான திட்டமிடப்பட்ட சதியாகும். பல்கலைக்கழகங்களில் 'பகுஜன்களின்' போதுமான பங்கேற்பு இல்லாததால், தாழ்த்தப்பட்ட சமூகங்களின் பிரச்னைகள் ஆராய்ச்சி மற்றும் விவாதங்களிலிருந்து வேண்டுமென்றே மறைந்துபோகும்படி செய்யப்படுகின்றது.

ஆயிரக்கணக்கான தகுதியுள்ள எஸ்சி, எஸ்டி, ஓபிசி வேட்பாளர்கள் மனுவாத சிந்தனையின் கீழ் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். மேலும் அரசு எந்தவித பொறுப்பையும் ஏற்கத் தயாராக இல்லை. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

காலியாக உள்ள அனைத்து பதவிகளும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். மனுவாதம் புறக்கணிப்பு அல்ல, பகுஜன்களுக்கு அவர்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Congress leader Rahul Gandhi on Friday attacked the Modi government over vacant reserved posts for SCs, STs and OBCs in central universities and said this is not just negligence but a "well-planned conspiracy" to keep 'Bahujans' out of education, research and policies.

அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சமீபகாலமாக மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், மாணவர்களின் தற்கொலை எண்ணத்தைப் போக்க உச்சநீதிமன்றம் சில வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.ஆந்... மேலும் பார்க்க

அவசர ஊர்தியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை! எதிர்க்கட்சிகள் கண்டனம்

பிகார் மாநிலத்தில் அவசர ஊர்தியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு பெண் ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உடற்தகுதித் தேர்வுக்குச் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவத்துக்கு எதிர்க்கட்சிக... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்ட 17 எம்.பி.க்களுக்கு விருது!

நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது 2025 வழங்கி கௌரவிக்கப்படவிருக்கிறது.சன்சத் ரத்னா விருது 2025-க்கு தேர்வானவர்கள்: சுப்ரியா சுலேரவி கிஷன்நிஷிகாந்த் து... மேலும் பார்க்க

அவைத் தலைவரிடம் முதல் கோரிக்கை வைத்து திட்டு வாங்கியதைப் பகிர்ந்த கிரண் ரிஜிஜு

புது தில்லி: நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தான் முதன் முதலில், அவைத் தலைவரை சந்தித்தபோது வைத்தக் கோரிக்கையும் அதனால் அவரிடம் திட்டு வாங்கியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.தான் அரசியலில் ... மேலும் பார்க்க

மன அழுத்தத்தை ஏற்படுத்திய கல்லூரி நிர்வாகம்: உதய்பூரில் பல் மருத்துவ மாணவி தற்கொலை!

உதய்பூர் அருகேயுள்ள டெபாரியில் பல் மருத்துவம் பயிலும் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறை காவலரின் ஒரே மகள் ஸ்வேதா சிங்(25). இவர் ... மேலும் பார்க்க

ஊர்க்காவல்படைத் தேர்வின்போது மயங்கிய பெண்! ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை!!

பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில், ஊர்க்காவல் படைத் தேர்வின்போது மயங்கி விழுந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸில் ஏற்றியபோது, அங்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் எ... மேலும் பார்க்க