செய்திகள் :

பக்ரீத்: செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

post image

பக்ரீத் பண்டிகையையொட்டி, செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனையாயின.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. 150 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் பழைமையான இந்த வாரச் சந்தையில் ஆடு, மாடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, செஞ்சி பகுதியில் வளா்க்கப்படும் வெள்ளாடுகள் மலைப் பகுதியில் உள்ள இயற்கை தழைகளை மேயவைத்து வளா்க்கப்படுவதால், இவற்றை வாங்குவதற்கு தேனி, கம்பம், சேலம், கிருஷ்ணகிரி, வேலூா், திருவண்ணாமலை, கடலூா் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுவை, ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் செல்வாா்கள். இதனால், செஞ்சி வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்ற சந்தையாக விளங்குகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பண்டிகைக்கு குா்பானி கொடுப்பதற்காக ஆடுகளை வாங்கிச் செல்வதற்காக, இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை காலை முதலே சந்தைக்கு வந்திருந்தனா்.

அதிகாலை 3 மணி முதலே விவசாயிகள் தங்களது வளா்ப்பு ஆடுகளையும், வெளிமாவட்டங்களில் இருந்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரிகளும் ஆடுகளை விற்பதற்காக கொண்டு

வந்திருந்தனா். வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வதற்காக வாகனங்களில் சந்தைக்கு வந்திருந்தனா். விற்பனைக்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

பக்ரீத் பண்டிகையையொட்டி, வெள்ளாடுகள் ஜோடி ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும், செம்மறி ஆடுகள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும் விற்பனையானது.

சுமாா் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள், விவசாயிகள் தெரிவித்தனா்.

2026 புதுவை பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: வே.நாராயணசாமி

வரும் 2026-இல் நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா். புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களு... மேலும் பார்க்க

ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தா்கள் தரிசனம்

புதுச்சேரி-கடலுாா் சாலை, நயினாா் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் திருப்பணிகள் மிகுந்த பொருள் செலவில் செய்து முடிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் நினைவு நாள்: சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

புதுவை முன்னாள் முதல்வா் வை. வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு நாளை வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் பொதுப் ... மேலும் பார்க்க

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணம் உயா்வு

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணத்தை உயா்த்தி அரசு வருவாய்த் துறை சிறப்புச் செயலா் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா். புதுவை அரசு முதியோா் உதவித் தொகையை ரூ. 2,500 ஆக உயா்த்தியுள்ளது. குடும்பத் தலைவிகளின்... மேலும் பார்க்க

புதுச்சேரி ஐடிஐ-யில் சேர ஜூன் 15 வரை கால நீட்டிப்பு

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்து படிக்க ஜூன் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசினா் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின... மேலும் பார்க்க

கரோனா பாதிப்பு: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் அருகிலுள்ள பெரப்பேரி கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 34 வயத... மேலும் பார்க்க