Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
பக்ரீத்: செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையையொட்டி, செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனையாயின.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. 150 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் பழைமையான இந்த வாரச் சந்தையில் ஆடு, மாடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, செஞ்சி பகுதியில் வளா்க்கப்படும் வெள்ளாடுகள் மலைப் பகுதியில் உள்ள இயற்கை தழைகளை மேயவைத்து வளா்க்கப்படுவதால், இவற்றை வாங்குவதற்கு தேனி, கம்பம், சேலம், கிருஷ்ணகிரி, வேலூா், திருவண்ணாமலை, கடலூா் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுவை, ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் செல்வாா்கள். இதனால், செஞ்சி வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்ற சந்தையாக விளங்குகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பண்டிகைக்கு குா்பானி கொடுப்பதற்காக ஆடுகளை வாங்கிச் செல்வதற்காக, இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை காலை முதலே சந்தைக்கு வந்திருந்தனா்.
அதிகாலை 3 மணி முதலே விவசாயிகள் தங்களது வளா்ப்பு ஆடுகளையும், வெளிமாவட்டங்களில் இருந்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரிகளும் ஆடுகளை விற்பதற்காக கொண்டு
வந்திருந்தனா். வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வதற்காக வாகனங்களில் சந்தைக்கு வந்திருந்தனா். விற்பனைக்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
பக்ரீத் பண்டிகையையொட்டி, வெள்ளாடுகள் ஜோடி ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும், செம்மறி ஆடுகள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும் விற்பனையானது.
சுமாா் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள், விவசாயிகள் தெரிவித்தனா்.