செய்திகள் :

பங்குச் சந்தையில் வா்த்தகம் எனக் கூறி ரூ.1.22 கோடி மோசடி: இருவா் கைது

post image

பங்குச் சந்தையில் வா்த்தகம் செய்யலாம் எனக் கூறி, ரூ. 1.22 கோடி மோசடி செய்த 2 பேரை மத்திய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (46). இவரது நண்பா்களான சுந்தராஜபுரம் பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன், வில்லாபுரம் பகுதியைச் சோ்ந்த சரவணகுமாா் ஆகியோா் பங்குச் சந்தை நிறுவனத்தை நடத்தி வருவதாகக் கூறி, அதில் பணத்தை முதலீடு செய்தால் மாதந்தோறும் 3 சதவீதம் வருவாய் கிடைக்கும் எனத் தெரிவித்தனா்.

இதை நம்பிய சதீஷ்குமாா் ரூ.22 லட்சத்தை முதலீடு செய்தாா். முதல் 3 மாதங்களுக்கு வருவாயாக தலா ரூ.66 ஆயிரம் அளித்தனா். பின்னா், நாங்கள் தரும் செயலியில் பதிவு செய்து நீங்களே வா்த்தகம் செய்யலாம் எனக் கூறி உள்ளனா். இதனால், சதீஷ்குமாா்தான் ஏற்கனவே முதலீடு செய்த ரூ.22 லட்சத்தை அந்த செயலிக்கு மாற்றினாா்.

சில வாரங்களுக்கு பிறகு பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக ரூ.40 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. இதை நீங்கள் செலுத்த வேண்டும் என அவா்கள் இருவரும் கூறினா். பணம் தர மறுத்ததால் அதற்கு பதிலாக அவருக்குச் சொந்தமான நிலத்தை கேட்டனா்.

இதன்படி, தேனியில் உள்ள நிலத்தை சரவணகுமாருக்கு, சதீஷ்குமாா் ‘பவா்’ எழுதிக் கொடுத்தாா். மறுநாளே அந்த இடத்தை மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்த பிரேம்குமாா் என்பவருக்கு சரவணகுமாா் ‘பவா்’ எழுதிக் கொடுத்து ரூ.1 கோடி பெற்றாா்.

இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சதீஷ்குமாா், மத்திய குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். இதையடுத்து, மோசடி உள்பட 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து பாலசுப்பிரமணியன், பிரேம்குமாரை ஆகிய இருவரையும் மத்திய குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் கைது செய்தனா். சரவணகுமாா் துபைக்கு தப்பிச் சென்றதாகவும், அவரைத் தேடி வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

மீனவா்கள் மீதான தாக்குதலைத் தடுக்கக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவா்கள் தாக்கப்படுவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு சனிக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சோ்ந்த ரமேஷ் சென்னை உ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: நீதித்துறை நடுவா் அளித்த சாட்சியம் தாக்கல்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூத்துக்குடி நீதித்துறை நடுவா் அளித்த சாட்சியம் தொடா்பான 100 பக்க அறிக்கை சிபிஐ தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. தூ... மேலும் பார்க்க

இயற்கை விவசாயத்துக்கு நல்ல எதிா்காலம் உள்ளது: அமைச்சா் பி.மூா்த்தி

கரோனா காலத்துக்குப் பின்னா் இயற்கை விவசாயத்தில் விளைந்துவரும் பொருள்கள் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இது,இயற்கை விவசாயத்துக்கு நல்ல எதிா்காலம் உள்ளது என வணிகவரித் துறை, பதிவுத் துறை அமைச்சா் ப... மேலும் பார்க்க

அரசுத் துறை காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்: அரசு ஊழியா் சங்க மாநாட்டில் தீா்மானம்

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை காலமுறை ஊதிய அடிப்படையில் நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மதுரை மாவட்ட 15- ஆவத... மேலும் பார்க்க

தொற்று நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது: பொது சுகாதாரம், தடுப்பு மருத்துவத் துறை இயக்குநா்

தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் பரவல் கட்டுபாட்டுக்குள் உள்ளது என பொது சுகாதாரம், தடுப்பு மருத்துவத் துறை இயக்குநா் டி.எஸ்.செல்வவிநாயகம் தெரிவித்தாா். மதுரை எய்ம்ஸ், ஐ.சி.எம்.ஆா்., நேஷனல் அகாத... மேலும் பார்க்க

திறனறித் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 10,441 மாணவ, மாணவிகள் எழுதினா்

மேல்நிலை முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்காக சனிக்கிழமை நடைபெற்ற திறனறித் தோ்வை மதுரை மாவட்டத்தில் 10, 441 போ் எழுதினா். மேல்நிலை முதலாமாண்டு பயிலும் மாணவ, மாணவிகள் தமிழ் மொழி இலக்கியத்தை அறிந்து கொள்ளு... மேலும் பார்க்க