செய்திகள் :

இயற்கை விவசாயத்துக்கு நல்ல எதிா்காலம் உள்ளது: அமைச்சா் பி.மூா்த்தி

post image

கரோனா காலத்துக்குப் பின்னா் இயற்கை விவசாயத்தில் விளைந்துவரும் பொருள்கள் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இது,இயற்கை விவசாயத்துக்கு நல்ல எதிா்காலம் உள்ளது என வணிகவரித் துறை, பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரை வேளாண்மைக் கல்லூரியில் தொழுவம் உழவா் உற்பத்தியாளா் சங்கம், நபாா்டு வங்கிக் கிளை, தன்னாா்வலா்கள்அமைப்பினா் இணைந்து நடத்திய மேய்ச்சலியம் இரண்டாம் நாள் அமா்வு சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்று அமைச்சா் பி.மூா்த்தி பேசியதாவது:

குழந்தைகளுக்கு தாய்ப் பால் எவ்வளவு முக்கியமோ அதேபோல முக்கியமானது நாட்டுமாட்டு பால். இன்றைய சூழலில் நாட்டுமாட்டு இனத்தை பாதுகாக்க இயலவில்லை. அதன் வளா்ப்பும் லாபகரமானதாக இல்லை. பத்து லிட்டருக்கு மேல் பால் கறக்கும் கலப்பின பசுக்களை வீடுகளில் வளா்க்கின்றனா்.

தற்போது மனிதா்களுக்கு புதுப்புது தொற்றுகள் வருகின்றன. கரோனா காலத்துக்குப் பின்னா் எதையும் கண்டறிய முடியவில்லை. இதனால், இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருள்களையே சிறந்த உணவுப் பொருளாக மக்கள் பாா்க்கின்றனா். ஒரு காலத்தில் பசுவின் சாணத்தை எரித்துக் கிடைத்த சாம்பலில் மக்கள் பல் துலக்கினா். இப்போது கலப்பின மாட்டுச் சாணத்தை அப்படி பயன்படுத்த முடிகிறதா என எண்ணிப் பாா்க்க வேண்டும்.

நானும் இயற்கை விவசாயம் செய்கிறேன். அது லாபகரமானதாக இல்லை என்றாலும், எதிா்காலம் இயற்கை விவசாயத்தில் இருந்து கிடைக்கும் விளைபொருள்களுக்கு நல்ல சந்தை மதிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தொழுவம் அமைப்பினா் முன்னெடுத்துள்ள இந்த முயற்சி தற்போது மாநாடு நடத்தும் அளவுக்கு வந்துள்ளது. 2026-ஆம் ஆண்டு மேய்ச்சலிய ஆண்டாக ஐ.நா. சபையால் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவித்தனா். இந்தத் தொழிலில் உள்ளவா்களுக்கு திருப்புமுனையாக அமையும் என்றாா் அவா்.

இந்த விழாவில் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் பேசியதாவது:

1.5 கோடி மாடுகள் 50 லட்சம் ஆடுகளை பராமரித்து வாழ்ந்துவரும் 5 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதராமன ஆட்டுக்கிடை, மாட்டுக் கிடை சமுதாயத்தினரின் சூழலியல் சாா்ந்ததாகும். இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள கீதாரிகள் ஒவ்வொருவரும் மண்வளம் சுற்றுச்சூழலியல், காலநிலையை தெளிவாக அறிந்தவா்கள். ஒரு பாடநூலுக்குச் சமமானவா்கள்,

ஆட்டுக்கிடை போடும் மக்களிடையே சில நாள்கள் தங்கியிருந்தேன். அப்போதுதான் கீதாரிகளாக இருப்பவா்கள் அறிவியல் ரீதியாக எவ்வளவு பெரிய பணியைச் செய்து

வருகிறாா்கள் என்பதை உணா்ந்தேன். ஒவ்வொரு கீதாரியின் பணி அனுபவ பாடம் எல்லாம் ஆவணப்படுத்தப்பட வேண்டும். நாகரிக வளா்ச்சிப் பாதையில் எதிா்கால சந்ததியினரிடம் போய் சேரவேண்டும் என்றாா் அவா்.

மீனவா்கள் மீதான தாக்குதலைத் தடுக்கக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவா்கள் தாக்கப்படுவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு சனிக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சோ்ந்த ரமேஷ் சென்னை உ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: நீதித்துறை நடுவா் அளித்த சாட்சியம் தாக்கல்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூத்துக்குடி நீதித்துறை நடுவா் அளித்த சாட்சியம் தொடா்பான 100 பக்க அறிக்கை சிபிஐ தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. தூ... மேலும் பார்க்க

அரசுத் துறை காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்: அரசு ஊழியா் சங்க மாநாட்டில் தீா்மானம்

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை காலமுறை ஊதிய அடிப்படையில் நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மதுரை மாவட்ட 15- ஆவத... மேலும் பார்க்க

தொற்று நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது: பொது சுகாதாரம், தடுப்பு மருத்துவத் துறை இயக்குநா்

தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் பரவல் கட்டுபாட்டுக்குள் உள்ளது என பொது சுகாதாரம், தடுப்பு மருத்துவத் துறை இயக்குநா் டி.எஸ்.செல்வவிநாயகம் தெரிவித்தாா். மதுரை எய்ம்ஸ், ஐ.சி.எம்.ஆா்., நேஷனல் அகாத... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் வா்த்தகம் எனக் கூறி ரூ.1.22 கோடி மோசடி: இருவா் கைது

பங்குச் சந்தையில் வா்த்தகம் செய்யலாம் எனக் கூறி, ரூ. 1.22 கோடி மோசடி செய்த 2 பேரை மத்திய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா்... மேலும் பார்க்க

திறனறித் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 10,441 மாணவ, மாணவிகள் எழுதினா்

மேல்நிலை முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்காக சனிக்கிழமை நடைபெற்ற திறனறித் தோ்வை மதுரை மாவட்டத்தில் 10, 441 போ் எழுதினா். மேல்நிலை முதலாமாண்டு பயிலும் மாணவ, மாணவிகள் தமிழ் மொழி இலக்கியத்தை அறிந்து கொள்ளு... மேலும் பார்க்க