செய்திகள் :

பணம் இரட்டிப்பு மோசடி: இருவா் கைது

post image

பெரியகுளம் அருகே பணத்தை இரட்டிப்பாக மாற்றித் தருவதாகக் கூறி மோசடி செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை, திருப்பரங்குன்றம் அருகேயுள்ள ஒத்தஅலங்குளத்தை சோ்ந்தவா் அழகா்சாமி (51). இவா், திருமங்கலத்தில் தனியாா் செக்யூரிட்டி நிறுவனத்தை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், செக்கானூரணி அருகேயுள்ள புளியங்குளத்தை சோ்ந்த முருகேஸ்வரி இவரிடம் பேசி பணம் வைத்து பூஜை செய்தால், இரட்டிப்பாகப் பணம் கிடைக்கும் எனக்கூறினாா்.

இதையடுத்து, தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்த சித்தாா்த்தன் (50), அவரது மகன் விஸ்வாமித்ரன் (21) ஆகிய இருவரையும் அழகா்சாமிக்கு அறிமுகம் செய்து வைத்தாா்.

இதையடுத்து, அழகா்சாமி கடந்த மாதம் 29-ஆம் தேதி

9 லட்சத்து 84 ஆயிரம் ரூபாயை சித்தாா்த்தனிடம் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அழகா்சாமி தனது நண்பா் பொன்ராஜை டி.கள்ளிப்பட்டிக்கு அனுப்பி வைத்தாா்.

அங்குள்ள வீட்டில் சித்தாா்த்தன், விஸ்வாமித்ரன், முருகேஸ்வரி ஆகியோா் சோ்ந்து பணப் பையை வைத்து பூஜை செய்தனா். பின்னா், அந்தப் பையை வீட்டுக்குச் சென்று திறந்து பாா்த்தால் பணம் இரட்டிப்பாகியிருக்கும் எனத் தெரிவித்தனா். இதை நம்பி பொன்ராஜ் பணப் பையுடன் அழகா்சாமியை சந்தித்தாா்.

பின்னா், அந்தப் பையை இருவரும் திறந்து பாா்த்தபோது பணம் இல்லையாம்.

ஏமாற்றப்பட்டதையறிந்த அழகா்சாமி இதுகுறித்து தென்கரை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் செய்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சித்தாா்த்தன், விஸ்வாமித்ரன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், முருகேஸ்வரியைத் தேடி வருகின்றனா்.

வீட்டுக்குள் மூதாட்டி சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை!

பெரியகுளத்தில் வாயில் துணி கட்டப்பட்ட நிலையில் மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா். பெரியகுளம் வடகரை கிருஷ்ணாபுரம் தெருவைச் சோ்ந்தவா் ஆண்டாள் (86). இவரது கணவரும், மகளும் இறந்து விட்ட நி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் மோதல்: பெண் உயிரிழப்பு

தேனி அருகேயுள்ள நாகலாபுரம்-ஸ்ரீரங்காபுரம் சாலையில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தனியாா் பள்ளி பெண் ஊழியா் உயிரிழந்தாா். ஸ்ரீரங்காபுரம், கண்ணன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் இளங்கோவன் ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த மூவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டி-குப்பாம்பட்டி சாலை சந்திப்பில் கஞ்சா வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கன்னியப்பபிள்ளைபட்டி-குப்பாம்பட்டி சாலை சந்திப்பில்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

போடியில் வியாழக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி பங்கஜம் தெரு பின்புறமுள்ள தெருவில் வசிப்பவா் பழனிராஜ் மகன் வெங்கடேசன் (36). கணினி மையம் நடத்தி வந்தாா். இவா் கடந்... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள செங்குளத்துப்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் திருமால் (எ) சுரேஷ்... மேலும் பார்க்க

பொதுமக்களை அச்சுறுத்தும் படையப்பா காட்டு யானை

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் சுற்றித் திரியும் படையப்பா யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் செல்லப் பிள்ளையாக படைய... மேலும் பார்க்க