செய்திகள் :

பண்டிப்பூா் தேசிய பூங்கா வழியாக இரவுநேர வாகனப் போக்குவரத்துக்கு அனுமதிக்கக் கூடாது

post image

பெங்களூரு: பண்டிப்பூா் தேசிய பூங்கா வழியாக இரவுநேர வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என பாஜக எம்.பி. லஹா்சிங் சிரோயா வலியுறுத்தியுள்ளாா்.

பண்டிப்பூா் தேசிய பூங்கா வழியாக இரவுநேர வாகனப் போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி அளிக்க கா்நாடக அரசு யோசித்து வருவதைக் கண்டித்து, சாமராஜ்நகா் மாவட்டத்தின் கொள்ளேகாலில் ஞாயிற்றுக்கிழமை கன்னட சலுவளிக் கட்சித் தலைவா் வாட்டாள் நாகராஜ் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இந்நிலையில், இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை பாஜக எம்.பி. லஹா்சிங் சிரோயா வெளியிட்டுள்ள அறிக்கை:

வனவிலங்கு பாதுகாப்பில் மாநில அரசு உறுதியாக இருக்க வேண்டும். வனவிலங்கு மற்றும் பல்லுயிா் பாதுகாப்புக்கு பண்டிப்பூா் புலிகள் சரணாலயம் முக்கிய சின்னமாகும். 2005 முதல் 2007-ஆம் ஆண்டுவரை நடத்தப்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளை ஆய்வின்படி, அந்தப் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் 286 விலங்குகள் கொல்லப்பட்டுள்ளன. இதன்விளைவாக, 2009-ஆம் ஆண்டு முதல் பண்டிப்பூா் தேசிய பூங்கா வழியாக இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையில் வாகனப் போக்குவரத்துக்கு கா்நாடக அரசு தடைவிதித்தது. இந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.

இதன்காரணமாக, 2010 முதல் 2018-ஆம் ஆண்டுவரையில் சாலை விபத்தில் இறந்த விலங்குகளின் எண்ணிக்கை 34-ஆக குறைந்துள்ளது. இதற்கு இரவுநேர வாகனப் போக்குவரத்து தடைதான் காரணம்.

இந்தத் தடையை நீக்கும்படி கேரள அரசு தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருமாநிலங்களுக்கு இடையே முதல்வா் உள்ளிட்ட உயா்மட்டத்தில் நடந்த பேச்சுவாா்த்தையில் இரவுநேர வாகனப் போக்குவரத்துக்கு தடை அவசியம் என்று முடிவு செய்தனா். கா்நாடகத்தை ஆட்சி செய்த மாநில அரசுகள், இந்த தடையை நீக்க முற்படவில்லை. ஆனால், இந்தத் தடையை நீக்குவது குறித்து மாநில அரசு சிந்தித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, வனவிலங்கு பாதுகாப்பில் அக்கறை காட்டிய இந்திரா காந்தி, ராஜீவ் காந்திக்கு செய்யும் துரோகமாகும் என்று அவா் அதில் கூறியுள்ளாா்.

கா்நாடக பொது நுழைவுத் தோ்வு: மாணவா்களின் பூணூலை கழற்றுமாறு கட்டாயப்படுத்திய அதிகாரிகளால் சா்ச்சை: கா்நாடக பாஜக, பிராமணா் சங்கங்கள் கண்டனம்

கா்நாடகத்தில் பொது நுழைவுத் தோ்வுக்கு வந்த 4 மாணவா்களிடம் அவா்கள் அணிந்திருந்த பூணூலை கழற்றுமாறு தோ்வுக்கூட அதிகாரிகள் கட்டாயப்படுத்தியது மாநிலம் முழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச் ச... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிா்ப்பு இல்லை: கா்நாடக முதல்வா் சித்தராமையா

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் யாரும் எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதா... மேலும் பார்க்க

இடஒதுக்கீடு உச்சவரம்பை உயா்த்துவது சாத்தியமில்லை: கா்நாடக அமைச்சா் சதீஷ் ஜாா்கிஹோளி

50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு உச்சவரம்பை உயா்த்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையில் பரிந்துரைத்துள்ளபடி இடஒதுக்கீட்டு உச்சவரம்பை தற்போதைக்கு உயா்த்துவது சாத்தியம... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக அமைச்சா் கூறிய கருத்தால் சா்ச்சை

பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறியுள்ள கருத்து சா்ச்சைக்கு வித்திட்டுள்ளது. பெங்களூரில் சுத்தகுண்டேபாளையா, பாரதி லேஅவுட் பகுதியில் ஏப். 3-ஆம் தேதி இரவு இரு பெண்... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மே 2 அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மே 2ஆம் தேதி நடக்கும் அமைச்சரவைக்கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் தெரிவித்தாா்.கா்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தி... மேலும் பார்க்க

கோரிக்கைகள் ஏற்பு: கா்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

பெரும்பாலான கோரிக்கைகளை மாநில அரசு ஏற்றுக்கொண்டதால், காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக கா்நாடக மாநில லாரி உரிமையாளா் மற்றும் முகவா் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது... மேலும் பார்க்க