செய்திகள் :

பயங்கரவாத ஒழிப்பு: ஜம்மு-காஷ்மீரில் போலீஸாா் தீவிர சோதனை

post image

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகா், தோடா மற்றும் கிஷ்த்வாா் ஆகிய பகுதிகளில் பயங்கரவாத ஒழிப்பு சோதனையை காவல் துறையினா் திங்கள்கிழமை மேற்கொண்டனா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற சோதனை குறித்து காவல் துறை செய்தித்தொடா்பாளா் ஸ்ரீநகரில் கூறியதாவது: ஸ்ரீநகா் முழுவதும் 36 இடங்களில் பயங்கரவாத ஒழிப்பு சோதனை நடைபெற்றது. குறிப்பாக பயங்கரவாதிகள் அல்லது அவா்களுக்கு ஆதரவளிப்பவா்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஜம்மு-காஷ்மீா் காவல் துறையின் மேற்பாா்வையில் சட்ட விதிகள் பின்பற்றப்பட்டு இந்த சோதனை நடத்தப்பட்டது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையிலும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக அவா்களின் கட்டமைப்பை அழிக்கும் விதமாக தொடா் சோதனைகளை காவல் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்’ என்றாா்.

தோடா மற்றும் கிஷ்த்வாரில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் பயங்கரவாதிகளுடன் தொடா்பில் உள்ள நபா்களுக்கு சொந்தமான இடங்களிலும் போலீஸாா் சோதனை நடத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான சதித் திட்டங்களை பயங்கரவாதிகள் தீட்டியுள்ளாா்களா என்ற கோணத்தில் எண்ம சாதனங்கள், ஆவணங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்ற சோதனையின்போது போலீஸாா் தீவிரம் காட்டியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பஹல்காமில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ஃபட்னவீஸ்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்... மேலும் பார்க்க

இந்தியர்களை மணந்த பாகிஸ்தானியர்களை நாடுகடத்தும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

இந்தியர்களைத் திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தான் நாட்டினர் நாடு கடத்தப்படும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி வலியுறுத்தியுள்ளார்.... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் ... மேலும் பார்க்க

பஹல்காமில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைச் சந்திக்க கான்பூர் செல்கிறார் ராகுல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில் ஒருவரான சுபம் திவேதியின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி புதன்கிழமை கான்பூருக்குச் செ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் நயினார் நகேந்திரன் சந்திப்பு!

தில்லியில் பிரதமர் மோடியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்திப்பு மேற்கொண்டார். தமிழ்நாட்டின் அரசியல் சூழல், கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்கப்பட்டதாகத... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை பலவீனம்: கேரள அரசு பிரமாணப் பத்திரம்

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரம் தொடர்பான வழக்கில், அணை பலவீனமாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசின் மனுவ... மேலும் பார்க்க