செய்திகள் :

பள்ளிக்கரணை : `சதுப்பு நிலத்தில் கட்டடம் கட்ட இடைக்கால தடை’ - உயர் நீதிமன்றம் அதிரடி

post image

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட சிஎம்டிஏ அனுமதி அளித்துள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன.

இதனையடுத்து, `சதுப்பு நிலத்தில் கட்டடம் கட்ட அனுமதி அளிக்கவில்லை’ எனவும் `சதுப்பு நிலத்திற்கு வெளியே தனியார் பட்டா நிலத்தில் அனுமதி அளிக்கப்பட்டதாகவும்’ அரசு விளக்கமளித்துள்ளது.

பள்ளிக்கரணை

இந்நிலையில், பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்ற கோரிக்கையுடன் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், சுற்றுச்சூழலுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் சதுப்பு நிலத்தில் கட்டுமான பணிக்கு சட்டவிரோதமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட சதுப்புநிலத்தில் தனது அதிகார எல்லையை மீறி தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பைகளை கொட்டுவது, ஐ.டி.நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களால் ஏற்கனவே பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா நீதிபதி அருள் முருகன் ஆகியோர் விசாரித்து சதுப்பு நிலத்தில் கட்டிடம் கட்ட இடைக்கால தடை விதித்தனர்.

`கோவில் சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட அறநிலையத்துறை தயங்குவது ஏன்?’ - உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்கள், மடங்கள், கட்டளைகளுக்கு சொந்தமாக உள்ள சொத்துக்கள், நிதி மற்றும் நிலங்கள் தொடர்பான விவரங்கள், அறநிலையத்துறையின் உத்தரவுகள், அரசாணைகள், டெண்டர் அறிவிக்கைகளை உள்ளிட்ட அ... மேலும் பார்க்க

`உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி' - பி.ஆர்.கவாய் பரிந்துரை; `சூர்ய காந்த்' பின்னணி என்ன?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தனது பதவிக்காலம் முடிந்ததும் அடுத்த தலைமை நீதிபதியாக இருக்க நீதிபதி சூர்யா காந்தை தேர்வு செய்துள்ளார். வரும் நவம்பர் 24ம் தேதி சூர்யா காந்த் தலைமை நீதிபதியாக பதவி ஏற்... மேலும் பார்க்க

CJI கவாய் மீது காலணி வீசிய வழக்கு: ராகேஷ் கிஷோர் மீது நடவடிக்கை எடுக்க மறுத்த நீதிமன்றம் - ஏன்?

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் காலணி வீசி தாக்குதல் நடத்தமுயன்ற வழக்கில், வழக்கறிஞருக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் விரும்பவி... மேலும் பார்க்க

கரூர் : வாபஸ் பெறுவதாக கூறிய ஆனந்த்; அனுமதி அளித்து தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் - நடந்தது என்ன?

கரூரில், கடந்த செப்டம்பர் 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்... மேலும் பார்க்க

சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணைக்கு தடை! - இடைக்கால உத்தரவில் உயர் நீதிமன்ற கிளை தெரிவித்தது என்ன?

தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், கிராமப்பெயர்களில் உள்ள சாதியப் பெயர்களை நீக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது பரபரப்ப... மேலும் பார்க்க

உள்ளாட்சித் தேர்தல்களில் 42% இட ஒதுக்கீடு: தெலங்கானா அரசின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

தெலங்கானா மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 42 சதவிகிதமாக அமல்படுத்த, மாநில அரசு திட்டமிட்டது. இதை எதிர்த்து தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம... மேலும் பார்க்க