செய்திகள் :

உள்ளாட்சித் தேர்தல்களில் 42% இட ஒதுக்கீடு: தெலங்கானா அரசின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

post image

தெலங்கானா மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 42 சதவிகிதமாக அமல்படுத்த, மாநில அரசு திட்டமிட்டது. இதை எதிர்த்து தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் 42 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு தடைவிதித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தெலங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தெலங்கானா அரசு தரப்பு, ``மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு பிறகே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

 தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், இந்த மசோதா தாக்கல் சட்டமாகிவிட்டது" எனக் கூறப்பட்டது.

இந்த வாதத்துக்கு எதிராக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ``தேர்தல் அறிவிக்கப்பட்டதற்குப் முன்பு ஏன் இந்த இட ஒதுக்கீடு கொண்டுவரப்படவில்லை" என்றனர்.

அதைத் தொடர்ந்து பேசிய எதிர்தரப்பு வழக்கறிஞர், ``தெலங்கானா அரசு கொண்டுவந்திருக்கும் இந்த மசோதா, இட ஒதுக்கீடுக்கான 50 சதவிகித உச்ச வரம்பை மீறிவிட்டது" என்றார்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், ``50 சதவிகித இட ஒதுக்கீடு என்பது நிரந்தரமான விதியல்ல. மக்கள் தொகை கணக்கெடுப்பு, சமூக பொருளாதார ஆய்வுகள் போன்ற கடினமான சோதனைகளுக்குப் பிறகே கொண்டுவரப்பட்டது" என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், `` தெலங்கானா அரசு தேர்தலை இட ஒதுக்கீடு இல்லாமல் தொடரலாம். மேலும், இந்த இட ஒதுக்கீடு பற்றி உயர் நீதிமன்றமே தகுதியின் அடிப்படையில் இறுதி முடிவை எடுக்க வேண்டும்" எனத் தீர்ப்பளித்து, தெலங்கானா அரசின் மனுவை தள்ளுபடி செய்திருக்கின்றனர்.

டாஸ்மாக்: `என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? சிபிஐ கூட.!' ED-க்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

தமிழ்நாட்டில் டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டது தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்... மேலும் பார்க்க

`கோயில் சொத்துகள் பத்திரப் பதிவு' தமிழக அரசின் அரசாணைக்கு தடை! - உயர் நீதிமன்றம் உத்தரவு

கோயில் சொத்துகளை பத்திரப்பதிவு செய்யும் வகையில் வெளியான அரசாணைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.பதிவுத்துறைசேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையி... மேலும் பார்க்க

திருவட்டாறு ஆதிகேசவரின் தங்க கவசங்கள் திருடப்பட்ட வழக்கு - தண்டனை அறிவிக்கப்பட்ட 18 பேர் விடுதலை

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் வரலாற்று சிறப்புமிக்க ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆதிகேசவ பெருமாளின் தங்க கவசங்கள், நகைகள் உள்ளிட்டவை திருடப்பட்டு வருவதாக 1992-ம் ஆண்டு புகார... மேலும் பார்க்க

``இது என்னைப் பாதிக்காது'' - காலணி வீசிய வழக்கறிஞரை தவிர்த்து, வழக்கை கவனித்த தலைமை நீதிபதி கவாய்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக கவாய் பதவி வகித்து வருகிறார். இன்று அவர் வழக்கு ... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல் வழக்குகள்; விசாரனையின்போது நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

கரூரில் நடந்த த.வெ.க பரப்பரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் மரணமடைந்த சம்பவம் நாட்டையே கலங்க வைத்தது.இது சம்பந்தமாக சி.பி.ஐ விசாரணை கோரியும், த.வெ.க மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் 7 பொது நல... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல் வழக்குகள்; விசாரணையைத் தொடங்கிய மதுரை உயர் நீதிமன்றம்

கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரைக் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலர் காயமடைந்துள்ள நிலையில் பாதிக... மேலும் பார்க்க