செய்திகள் :

Gujarat: முதல்வரைத் தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா! - என்ன நடக்கிறது குஜராத் அரசில்?

post image

குஜராத் மாநிலத்தில் அக்டோபர் 17-ம் தேதி அமைச்சரவை மறுசீரமைப்பு நடைபெறவிருக்கிறது. 17 அமைச்சரவை உறுப்பினர்களுடன் ஆட்சி நடத்தி வந்த குஜராத் முதலவர் பூபேந்திர படேல் தலைமையிலான அரசில், புதிய முகங்களைச் சேர்த்து விரிவுபடுத்த பா.ஜ.க தயாராகி வருகிறது என்றத் தகவல் வெளியானது.

அதனால் குஜராத் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

2027-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரின் மேற்பார்வையில் இந்த மறுசீரமைப்பு நடைபெறும் எனக் கூறப்பட்டது.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்

அதைத் தொடர்ந்து, அமைச்சர்களில் சிலர் ராஜினாமா செய்யவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், குஜராத் மாநிலத்தின் அமைச்சர்கள் இன்றும் நாளையும் காந்திநகரில் தங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுத்தன.

இந்த நிலையில்தான் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலைத் தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அமைச்சரவை விரிவாக்கத்திற்கு முன்னதாக, 16 அமைச்சர்களும் இன்று குஜராத் முதல்வர் பூபேந்திர படேலிடம் தங்கள் ராஜினாமா கடிதங்களைச் சமர்ப்பித்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

வரவிருக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தில் சுமார் 10 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், ``குஜராத் முதல்வர் பூபேந்திர படேலின் அமைச்சரவை வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு விரிவாக்கம் செய்யப்படும்" என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்னி முறைகேடு விவகாரம்: அரசு எடுத்த நடவடிக்கை என்ன? - சட்டமன்றத்தில் பட்டியலிட்ட அமைச்சர்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில், நாமக்கல் கிட்னி முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.அதற்குப் பதிலளித்த மக்கள் நல்வாழ... மேலும் பார்க்க

Foxconn : 'அது ஒரு Unofficial உடன்பாடு!' - பாக்ஸ்கான் சர்ச்சையும் திமுக-வின் விளக்கமும்!

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தமிழக முதலீடு குறித்த விவகாரம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் 15000 கோடி ரூபாயை முதலீடு செய்யவிருப்பதாகவும், அதன் மூலம் மிகப்பெரிய ... மேலும் பார்க்க

"தனிக்கட்சி ஆரம்பிச்சிக்கோ அதான் உனக்கு நல்லது" - அன்புமணிக்கு ராமதாஸ் எச்சரிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ் அக்டோபர் 6-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.2013-ல் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதையடுத்து தற்போது பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராமதாஸ், அடுத்த ... மேலும் பார்க்க

TVK : தள்ளிப்போகும் விஜய்யின் கரூர் விசிட்? - காரணம் என்ன?

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தை தவெக தலைவர் விஜய் நாளை நேரில் சென்று பார்ப்பதாக இருந்தது. இந்நிலையில், இப்போது அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. விஜய்யின் கரூர் விசிட் தள்ளிப்போவ... மேலும் பார்க்க

ட்ரம்ப் 50% வரி; இந்தியா மீது தாக்கமா? இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் என்ன கூறுகின்றன?

இந்தியப் பொருள்களின் மீது அமெரிக்கா 50 சதவிகித வரி விதித்துள்ளது. இதனால், இந்தியாவின் வர்த்தகம் கணிசமாகப் பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதமே, இந்த வரி அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், ஒரு மாதம் முழுவதுமாக... மேலும் பார்க்க

இந்தியா இனி ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குமா? - `அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை' வெளியுறவுத் துறை பதில்

'இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்காது. மோடி என்னிடம் கூறினார்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் பேசியிருந்தார். இந்தியாவின் வர்த்தகம் குறித்து இந்திய அரசு எதுவும் தெரி... மேலும் பார்க்க