செய்திகள் :

ட்ரம்ப் 50% வரி; இந்தியா மீது தாக்கமா? இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் என்ன கூறுகின்றன?

post image

இந்தியப் பொருள்களின் மீது அமெரிக்கா 50 சதவிகித வரி விதித்துள்ளது. இதனால், இந்தியாவின் வர்த்தகம் கணிசமாகப் பாதித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதமே, இந்த வரி அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், ஒரு மாதம் முழுவதுமாக இந்த வரி தாக்கம் இருந்தது என்றால் அது செப்டம்பர் மாதம் தான். காரணம், ஆகஸ்ட் 22-ம் தேதி தான் அமெரிக்க வரி முழு அமலுக்கு வந்தது.

இந்த நிலையில், நேற்று இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை அமைச்சகம் கடந்த மாதத்தின் இந்தியாவின் வர்த்தக தரவுகளை வெளியிட்டுள்ளது.

அந்தத் தரவுகள் இதோ

இந்தத் தரவுகள் 2024-ம் ஆண்டு ஏப்ரல் - செப்டம்பர் மற்றும் 2025-ம் ஆண்டு ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களை ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த ஏற்றுமதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களை விட, இந்த ஆண்டு ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களில், இந்தியாவில் ஏற்றுமதி 4.45 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தையும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தையும் ஒப்பிடும்போது, இந்தியாவின் ஏற்றுமதி 0.78 சதவிகித வளர்ச்சியையும், இறக்குமதி 11.34 சதவிகித வளர்ச்சியையும் கொண்டுள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஏற்றுமதி, இறக்குமதி

கடந்த மாதம், இந்தியா 67.20 பில்லியன் டாலர்களுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 83.82 பில்லியன் டாலர்களுக்கு இறக்குமதி செய்துள்ளது.

இந்தியாவின் இறக்குமதி, ஏற்றுமதியை விட அதிகம் இருப்பதால், அதன் வர்த்தகப் பற்றாக்குறை 16.61 பில்லியன் டாலர்கள் அளவிற்கு உள்ளது. இது கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வாகும்.

இதுவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தப் பற்றாக்குறை 8.60 பில்லியன் டாலர்களாகத்தான் இருந்தது.

அமெரிக்கா உடனான வர்த்தகம்

2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததை விட, கடந்த மாதத்திற்கான ஏற்றுமதி 12 சதவிகிதம் குறைந்துள்ளது.

இறக்குமதி ஏன் அதிகம்?

கடந்த மாதம், இந்தியா உரங்களை மூன்று மடங்கு அதிகமாக இறக்குமதி செய்துள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால், தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதியும் அதிகரித்துள்ளது.

இப்படியான இறக்குமதிகளால் கடந்த மாதத்தின் இறக்குமதியின் அளவு மிகவும் அதிகரித்துள்ளது.

Donald trump - டொனால்ட் ட்ரம்ப்
Donald trump - டொனால்ட் ட்ரம்ப்

"தனிக்கட்சி ஆரம்பிச்சிக்கோ அதான் உனக்கு நல்லது" - அன்புமணிக்கு ராமதாஸ் எச்சரிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ் அக்டோபர் 6-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.2013-ல் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதையடுத்து தற்போது பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராமதாஸ், அடுத்த ... மேலும் பார்க்க

TVK : தள்ளிப்போகும் விஜய்யின் கரூர் விசிட்? - காரணம் என்ன?

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தை தவெக தலைவர் விஜய் நாளை நேரில் சென்று பார்ப்பதாக இருந்தது. இந்நிலையில், இப்போது அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. விஜய்யின் கரூர் விசிட் தள்ளிப்போவ... மேலும் பார்க்க

இந்தியா இனி ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குமா? - `அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை' வெளியுறவுத் துறை பதில்

'இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்காது. மோடி என்னிடம் கூறினார்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் பேசியிருந்தார். இந்தியாவின் வர்த்தகம் குறித்து இந்திய அரசு எதுவும் தெரி... மேலும் பார்க்க

கழுகார்: `பாலம் தந்த தலைவருக்குப் பாராட்டு விழா' கேட்ட மாஜி - கடுப்பில் சூரியக் கட்சி சீனியர்கள்

கடுப்பில் சூரியக் கட்சி சீனியர்கள்!விழாவுக்கு மேல் விழா எடுக்கும் மாஜி...வழக்குகளால் பதவியை இழந்த மாஜியார், தொடர்ந்து விதவிதமாக நிகழ்ச்சிகளை நடத்தி ஸ்கோர் செய்கிறாராம். சமீபத்தில், தன் சொந்த மாவட்டத்த... மேலும் பார்க்க

'1 அடி அடித்தால் 2 அடி கொடுப்பேன்; என்னிடம் மிரட்டல் வேண்டாம்' - அண்ணாமலை

கோவை வரதராஜபுரம் பகுதியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “கரூரில் 606 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்ததாக முதலமைச்சர் கூறுகிறார். ஏடிஜிபி டேவிட்ச... மேலும் பார்க்க

``ட்ரம்பை பார்த்து மோடி பயப்படுகிறார்'' - ராகுல் காந்தி அடுக்கும் 5 காரணங்கள்

நேற்று வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை விரைவில் நிறுத்தும்' என்று பேசியிருந்தார். ராகுல் காந்தி பதிவு இது குறித்து மக்களவை எதிர்க்கட்சி த... மேலும் பார்க்க