செய்திகள் :

அதிகாலை கொட்டித் தீர்த்த மழை; அரசு மருத்துவமனைக்குள் புகுந்த நீரால் பொதுமக்கள் அவதி

post image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை முடிந்த நிலையில் இன்று முதல் வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கியது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் இன்று காலை 6 மணி வரை 22 மி.மீ மழை பெய்தது. இதன் பின்னரும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

மழைநீர் தேங்கிய புதிய பேருந்து நிலையம்

இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளை காண வந்த பார்வையாளர்கள் தேங்கிக் கிடந்த மழை நீரினை கடந்து செல்ல அவதிப்பட்டனர்.

மழைநீர் புகுந்த தொழிலாளர் மருத்துவமனை

இதே போல் செட்டியார் தெரு பகுதியில் அரசுத் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை இயங்கி வருகிறது. வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் இந்த மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் இங்கு வைக்கப்பட்டிருந்த மருத்துப் பொருட்கள் மற்றும் பதிவேடுகள் மழை நீரில் நனைந்தன. மேலும் வழக்கமாக சிகிச்சைக்கு செல்லும் தொழிலாளர்கள் சிகிச்சைக்கு செல்ல முடியாமலும், அங்கு பணியாற்றும் மருத்துவ பணியாளர்களும் அவதிக்குள்ளாகினர்.

மழைநீர் புகுந்த தொழிலாளர் மருத்துவமனை

மேலும் ராமநாதபுரத்தில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டு கடந்த 3-ம் தேதி முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட புதிய பேருந்து நிலைய பகுதியில் தேங்கிய மழை நீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கியது. இதனால் பயணிகள் தேங்கிய மழை நீரை தாண்டிய படியே பேருந்துகளில் ஏறி சென்றனர். வடகிழக்கு பருவ மழை துவங்கிய முதல் நாளிலேயே தலைநகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்களுக்கு சிரமத்தை கொடுத்துள்ளது. இத்தகைய நிலையினை போக்க நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கனமழை: இன்றும், நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்? -சென்னை வானிலை மையம் அப்டேட்

இன்று தமிழ்நாட்டில் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கைப்படி, ஆரஞ்சு அலர்ட் இன்று திருநெ... மேலும் பார்க்க

குன்னூர்: விடிய விடிய கனமழை, சாலையில் சரிந்த ராட்சத பாறைகள்; உயிர் தப்பிய பயணிகள்

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றிரவு ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள... மேலும் பார்க்க

``இன்று 21 மாவட்டங்களில் மழை'' - IMD வானிலை எச்சரிக்கை; தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை

இன்று அதிகாலை முதல் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின் படி, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தர்மபுரி, திருச்சி, சிவ... மேலும் பார்க்க

இன்றும், நாளையும் எங்கெங்கு மழை பெய்யும்? - வானிலை அறிக்கை; வீக் எண்ட் பிளான் கவனம் மக்களே!

இன்றும், நாளையும் எங்கெங்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி, இன்று தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் க... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் அடுத்த வாரத்தில் வடகிழக்குப் பருவமழை; எந்தெந்த தேதிகளில்? - இந்திய வானிலை மையம்

இந்திய வானிலை மையம் நேற்று வாராந்திர வானிலை கணிப்பை வெளியிட்டது. வடகிழக்குப் பருவ மழை எப்போது? அதில் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர... மேலும் பார்க்க

அடுத்த 3 நாள்கள் தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - வானிலை மையம் அறிக்கை

'அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?' என்பதை வெளியிட்டுள்ளது சென்னை வானிலை மையம். நாளை கோவையின் மலைப்பகுதிகள், ஈரோடு, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்... மேலும் பார்க்க