Bigg Boss Tamil 9: "சபரி வெளியே போனது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்துச்சு"- விஜ...
Bison: "நிறைய உழைப்பும், யோசனையும் வைத்து நான் எடுத்தப்படம் பைசன்தான்"- மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் `பைசன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 17) வெளியாக இருக்கிறது.
துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
நீலம் ஸ்டூடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.

அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் கபடி வீரராக நடித்திருக்கிறார் துருவ் விக்ரம்.
இந்நிலையில் பைசன் படத்திற்கான செய்தியாளார் சந்திப்பு நேற்று (அக்.16) நடைபெற்றது.
அப்போது பேசிய மாரி செல்வராஜ், " என்னுடைய சினிமா வாழ்க்கையில் நிறைய உழைப்பும், யோசனையும் வைத்து எடுத்தப்படம் பைசன்தான்.
மணத்தி கணேசன் அண்ணா எனக்கு சொந்தக்காரர். சிறுவயதில் இருந்தே அவரை எனக்கு தெரியும்.
அவர்தான் அன்றைக்கு எனக்கு ஹீரோ. அவர் கபடி விளையாடும்போது முன் வரிசையில் அமர்ந்து பார்ப்போம்.
அவரை படம் எடுக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு தோன்றியதில்லை.
மணத்தி கணேசன் அண்ணனின் வெற்றி அவருடைய உழைப்பு, பயணம், ஸ்போர்ட்ஸ் எல்லாத்தையும் ஒரு நாள் எதர்ச்சியாக சந்திக்கும்போது பேசினோம்.

அப்போது தான் அவரிடம் கேட்டேன் உங்கள் வாழ்க்கையின் கருவை எடுத்துக்கொண்டு நான் ஒரு படம் பண்ணலாமா? என்று கேட்டேன்.
அதற்கு அவர் 'உன் மீது நம்பிக்கையும், மரியாதையும் இருக்கிறது'. அதனால் படத்தை எடு என்று சொன்னார்.
அவருடைய வெற்றி, உழைப்பு, கபடி இதையெல்லாம் எடுத்துக்கொண்டு நான் எடுக்க ஆசைப்பட்ட கதையையும் வைத்து புனைவாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.