செய்திகள் :

கிட்னி முறைகேடு விவகாரம்: அரசு எடுத்த நடவடிக்கை என்ன? - சட்டமன்றத்தில் பட்டியலிட்ட அமைச்சர்!

post image

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில், நாமக்கல் கிட்னி முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.

அதற்குப் பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், இந்த விவகாரத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார்.

கிட்னி திருட்டு
கிட்னி திருட்டு

அமைச்சர் மா. சுப்ரமணியன் தனது உரையில், ``சிறுநீரக முறைகேடு நடைபெறுவதாக வந்த புகார் குறித்து, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் மருத்துவர் வினித் விசாரணை மேற்கொண்டு விரிவான அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டார்.

அவர் தலைமையிலான குழு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், திருச்சி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது (17-07-25).

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், திருச்சி சித்தார் மருத்துவமனை, பெரம்பலூர் தனலக்ஷ்மி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வழங்கப்பட்ட உரிமங்கள் மருத்துவ மற்றும் ஊரக நலப்பணி இயக்குநரால் 23-07-25ல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

விசாரணை அலுவலர், மேற்கூறிய மருத்துமனையில் தவறான முறையில் சான்றுகள் சமர்ப்பித்து மனித உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது என்றும், மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்ட நுணுக்கங்களை தவறாகப் பயன்படுத்தியது தெரியவருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம் 1944-ன்படி சிறுநீரகம் மாற்றுதல் தொடர்பாக ஆவணங்களின் ஆய்வுகளின்போது சித்தார் மருத்துவமனை மற்றும் பெரம்பலூர் தனலக்ஷ்மி சீனிவாசன் மருத்துவமனையிலிருந்து பரிசீலனை செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இவ்விரு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட சிறுநீரக உறுப்பு மாற்று உரிமைச் சான்றிதழை ரத்து செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

சட்டமன்றத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்

இந்த சிறுநீரக முறைகேட்டில் ஈடுபட்டவர்களாகக் கண்டறியப்பட்ட இடைத்தரகர்களான ஸ்டான்லி மோகன், ஆனந்தன் ஆகிய இருவர் மீதும் பி.என்.எஸ் 2023-ன் உரிய பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.

மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம் 1944 -ன்படி செய்யப்படும் அறுவை சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் மருத்துவ சட்ட ரீதியான மெடிக்கோ லீகல் என்பதால் 10 ஆண்டுகள் வரை ஆவணங்கள் பராமரிக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக வருவாய்த்துறை, காவல்துறை, மருத்துவத்துறைக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட வேண்டும்.

சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அதோடு அனைத்து படிவங்களும் ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளில் வைத்திருக்க பரிந்துரை செய்யப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் உடல் உறுப்பு தானம் என்ற பெயரில் உடல் உறுப்பை முறைகேடாக விற்பது தவறான செயல் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் பரிந்துரை செய்யப்படுகிறது என்று 10 விதமான பரிந்துரைகளை அந்தக் குழு அளித்தது.

இவற்றைப் பரிசீலித்த அரசு பாரபட்சம் இல்லாமல், புகார் வந்த மருத்துவமனைகளின் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உரிமம் உடனடியாக ரத்து செய்தது.

இந்த சிறுநீரக முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் கண்டறியப்பட்ட இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இவை உட்பட மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது." என்றார்.

Foxconn : 'அது ஒரு Unofficial உடன்பாடு!' - பாக்ஸ்கான் சர்ச்சையும் திமுக-வின் விளக்கமும்!

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தமிழக முதலீடு குறித்த விவகாரம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் 15000 கோடி ரூபாயை முதலீடு செய்யவிருப்பதாகவும், அதன் மூலம் மிகப்பெரிய ... மேலும் பார்க்க

Gujarat: முதல்வரைத் தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா! - என்ன நடக்கிறது குஜராத் அரசில்?

குஜராத் மாநிலத்தில் அக்டோபர் 17-ம் தேதி அமைச்சரவை மறுசீரமைப்பு நடைபெறவிருக்கிறது. 17 அமைச்சரவை உறுப்பினர்களுடன் ஆட்சி நடத்தி வந்த குஜராத் முதலவர் பூபேந்திர படேல் தலைமையிலான அரசில், புதிய முகங்களைச் சே... மேலும் பார்க்க

"தனிக்கட்சி ஆரம்பிச்சிக்கோ அதான் உனக்கு நல்லது" - அன்புமணிக்கு ராமதாஸ் எச்சரிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ் அக்டோபர் 6-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.2013-ல் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதையடுத்து தற்போது பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராமதாஸ், அடுத்த ... மேலும் பார்க்க

TVK : தள்ளிப்போகும் விஜய்யின் கரூர் விசிட்? - காரணம் என்ன?

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தை தவெக தலைவர் விஜய் நாளை நேரில் சென்று பார்ப்பதாக இருந்தது. இந்நிலையில், இப்போது அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. விஜய்யின் கரூர் விசிட் தள்ளிப்போவ... மேலும் பார்க்க

ட்ரம்ப் 50% வரி; இந்தியா மீது தாக்கமா? இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் என்ன கூறுகின்றன?

இந்தியப் பொருள்களின் மீது அமெரிக்கா 50 சதவிகித வரி விதித்துள்ளது. இதனால், இந்தியாவின் வர்த்தகம் கணிசமாகப் பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதமே, இந்த வரி அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், ஒரு மாதம் முழுவதுமாக... மேலும் பார்க்க

இந்தியா இனி ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குமா? - `அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை' வெளியுறவுத் துறை பதில்

'இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்காது. மோடி என்னிடம் கூறினார்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் பேசியிருந்தார். இந்தியாவின் வர்த்தகம் குறித்து இந்திய அரசு எதுவும் தெரி... மேலும் பார்க்க