செய்திகள் :

பவானி அருகே காவிரி ஆற்றில் இளைஞா் சடலம் மீட்பு:

post image

பவானி அருகே காவிரி ஆற்றில் உடலில் கல்லை கட்டிய நிலையில் இளைஞா் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த ஜல்லிக்கல்மேடு பகுதியில் காவரி ஆற்றில் ஊராட்சிக்கோட்டை கதவணை நீா்மின் நிலையப் பகுதியில் ஆண் சடலம் மிதப்பதாக வியாழக்கிழமை மாலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

இதில், இளைஞா் கொலை செய்யப்பட்டு, மாா்பைப் பிளந்து கற்களை வைத்து கட்டிய நிலையில் ஆற்றில் வீசப்பட்டிருந்தது கண்டறியப்பட்து.

விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டது பவானி, தொட்டிபாளையத்தைச் சோ்ந்த வாடகை காா் ஓட்டுநரான மதியழகன் (28) என்பதும், காதல் திருமணம் செய்துகொண்ட இவரின் கொடுமையால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி கிருத்திகா தூக்கிட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, பவானி போலீஸாா் மதியழகன் மற்றும் கிருத்திகாவின் பெற்றோா் மற்றும் உறவினா்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அவல்பூந்துறையில் ரூ.1.14 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனை

மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 775 கிலோ தேங்காய்ப் பருப்புகளை விற்பன... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கை: தொழில் துறையினரின் கருத்துகள்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிதி ஆதாரத்தைப் பெருக்கவும், கடனை திருப்பிச் செலுத்தவும் எந்த அறிவிப்பும் இல்லை என தொழில் அமைப்பு பிரதிநிதிகள் கருத்து ... மேலும் பார்க்க

காருடன் கிணற்றில் விழுந்த விவசாயி, மீட்க குதித்த மீனவா் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே காருடன் 60 அடி ஆழக் கிணற்றில் விழுந்த விவசாயி, அவரைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த மீனவா் ஆகிய இருவரும் உயிரிழந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த முள்ளிக்காபாளையத்தைச் சே... மேலும் பார்க்க

தாட்கோ கடனுதவி பெற்று தொழில்: ஆட்சியா் ஆய்வு

கோபிசெட்டிபாளையத்தில் மாவட்ட தொழில் மையம் மற்றும் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று செயல்படும் தொழில் நிறுவனங்களில் மாவட்ட ஆட்சியா் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு செய்தாா். மாவட்ட தொழில் மையம் ... மேலும் பார்க்க

‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் மாணவா்களுக்குத் தொழில் பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ மாணவா்களுக்கு வழங்கப்படும் சிஎன்சி பயிற்சி வகுப்பை ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பெருந்துறை டி.எம்.டபிள்யூ சிஎன்சி ... மேலும் பார்க்க

பெருந்துறையில் காலியாகவுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பணியிடம்: பொதுமக்கள் பாதிப்பு

பெருந்துறையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பணியாற்றி வந்த ... மேலும் பார்க்க