செய்திகள் :

பிரசாந்த் கிஷோர் மீது அவதூறு வழக்கு!

post image

ஜன் சூராஜ் கட்சித் தலைவரான பிரசாந்த் கிஷோருக்கு எதிராக பிகார் மாநில அமைச்சர் அஷோக் சௌதரி, அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான அஷோக் சௌதரி, தனது மகளுக்கு மக்களவையில் இடம் ஒதுக்க ஒன்றிய அமைச்சர் ஒருவருக்கு லஞ்சம் வழங்கினார் என அரசியல் வியூக வகுப்பாளரும் ஜன் சூராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோருக்கு எதிராக அஷோக் சௌதரி அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

“பிரஷாந்த் கிஷோர், எனக்கும் எனது மகளுக்கும் எதிராகப் பேசிய அவதூறு கருத்துக்களைத் தொடர்ந்து, நான் அவருக்கு சட்டப்பூர்வமான நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு, அவரது பதில் திருப்திகரமாக இல்லை. இதன்மூலம், அவர் கூறியதற்கு கொஞ்சமும் அவர் வருத்தப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இதனால், நான் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். பிரசாந்த் கிஷோருக்கு சவால் விடுகிறேன், நான் சிராக் பஸ்வானுக்கு பணம் வழங்கியதாக அவர் கூறுவதை நிருபித்து காட்டட்டும் அல்லது உங்களது கருத்தை மன்னிப்புடன் திரும்பப் பெறுங்கள். இந்தப் போராட்டத்தில், ஒருவேளைத் தேவைப்பட்டால் நான் உச்ச நீதிமன்றம் செல்லவும் தயாராக இருக்கிறேன்.” என அவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளரான, பிரசாந்த் கிஷோரை, அரசியல் வியாபாரி என குறிப்பிட்ட சௌதரி, அவர் அனைத்துக் கட்சிகளுக்கும் பணத்துக்காகப் பணியாற்றினார் என விமர்சித்துள்ளார்.

இத்துடன், “நாங்கள் இரண்டாம் தலைமுறையாக முழுவதுமாக அரசியலில் உள்ளவர்கள், எனது மகள் இளம் எம்பி” எனக் கூறியதுடன், ஒரு தலித் பெண்ணின் இந்தச் சாதனையை பிரசாந்த் கிஷோரால் ஜீரணிக்க முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுப் பொருளாகியுள்ளது.

முன்னதாக, அஷோக் சௌதரியின் தந்தை, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பிகார் மாநில அமைச்சராகப் பணியாற்றினார். மேலும், அவரது மகளான சாம்பவி, சமஸ்திபூர் தனித் தொகுதியின், லோக் ஜன்ஷக்தி கட்சியின் மக்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:கோடை விடுமுறை.. திருப்பதியில் மே மாதம் சுவாமி தரிசனம் செய்தவர் எண்ணிக்கை!

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு! பிரதமர் மோடியே வெளியிட்ட தகவல்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு, இந்த நாடுகளிடையேயான ... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறிவைத்து வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து தில்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.காஜியாபாத் காவல் உதவி ஆணையர் ரித்தேஷ் திரிபாதி கூறுகையில், ஜூன் 5ஆம் தேதி... மேலும் பார்க்க

ஆர்சிபி பேரணி விவகாரம்! அரசியல் செயலாளர் விடுவிப்பு

ஆர்சிபி வெற்றிப் பேரணி விவகாரத்தில் முறையான ஆலோசனை வழங்காத அரசியல் செயலாளர் விடுவிக்கப்பட்டார்.பெங்களூரு ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவம், நாடு முழ... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசத்தில் விடுதி மாடியில் இருந்து குதித்து எம்பிபிஎஸ் மாணவர் தற்கொலை

மத்தியப் பிரதேசத்தில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர் விடுதியின் 4ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக... மேலும் பார்க்க

வாடிக்கையாளர்களின் ரூ. 4.58 கோடி கையாடல்! முதலீடு செய்த வங்கி மேலாளர் கைது

ராஜஸ்தானில் உள்ள வாடிக்கையாளர்களின் பணத்தைக் கையாடல் செய்த வங்கி மேலாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.ராஜஸ்தான் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் தனியார் வங்கியின் வாடிக்கையாளர்களின் பணத்தைக் கையாடல் செய்... மேலும் பார்க்க

நாட்டில் தொடரும் கரோனா பரவல்! தில்லியில் புதியதாக 30 பேருக்கு பாதிப்பு!

புது தில்லியில் புதியதாக 30 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ... மேலும் பார்க்க