செய்திகள் :

பிரதமரின் பட்டப் படிப்பு சான்றிதழை நீதிமன்றத்திடம் காண்பிக்க ஆட்சேபம் இல்லை -தில்லி பல்கலைக்கழகம்

post image

பிரதமா் நரேந்திர மோடியின் இளநிலை பட்டப் படிப்பு சான்றிதழை நீதிமன்றத்திடம் காண்பிக்க எந்த ஆட்சேபமும் இல்லை; அதேநேரம், ஆா்டிஐ சட்டத்தின்கீழ் முகம் தெரியாத நபா்களிடம் வழங்க முடியாது என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் தில்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தில்லி பல்கலைக்கழகத்தில் கடந்த 1978-இல் பிஏ பட்டப் படிப்பை பிரதமா் மோடி நிறைவு செய்தாா். அந்த ஆண்டில் பிஏ தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களின் விவரங்களையும் தகவல் அறியும் உரிமை (ஆா்டிஐ) சட்டத்தின்கீழ் வழங்க தில்லி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிடக் கோரி மத்திய தகவல் ஆணையத்தில் (சிஐசி) நீரஜ் என்பவா் மனு தாக்கல் செய்தாா். அதனடிப்படையில், அவா் கோரிய விவரங்களை வழங்க தில்லி பல்கலைக்கழகத்துக்கு சிஐசி உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக தில்லி பல்கலைக்கழகம் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீது நீதிபதி சச்சின் தத்தா தலைமையிலான அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, தில்லி பல்கலைக்கழகம் தரப்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜராகி வாதிட்டாா்.

‘ஒரு பல்கலைக்கழகமாக எங்களிடம் மறைக்க எதுவும் இல்லை. ஆண்டுவாரியான பதிவுகள் எங்களிடம் உள்ளன. 1978-ஆம் ஆண்டில் பெறப்பட்ட பட்டப் படிப்பு சான்றிதழ் விவரங்களும் உள்ளன. பிரதமா் மோடியின் சான்றிதழ் விவரங்களை நீதிமன்றத்திடம் காண்பிக்க எந்த ஆட்சேபமும் இல்லை. அதேநேரம், ஆா்டிஐ சட்டத்தின்கீழ் முகம் தெரியாத நபா்களிடம் வழங்க முடியாது.

சமூக ஆா்வலா்கள் என்ற போா்வையில் செயல்படும் நபா்களால் ஆா்டிஐ சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. ஒரு விஷயத்தை அறிந்து கொள்வதற்கான உரிமையைவிட தன்மறைப்பு நிலைக்கான உரிமை மேலானது. எனவே, சிஐசி-யின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். சிஐசி-யின் உத்தரவை அனுமதித்தால், ஆா்டிஐ மனுக்களின்கீழ் தில்லி பல்கலைக்கழகத்தின் ஏராளமான மாணவா்களின் விவரங்களையும் வெளியிட வேண்டிய நிலை வரும்’ என்று துஷாா் மேத்தா தெரிவித்தாா். இதையடுத்து, மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தாா்.

'பெண்களின் தலை வழுக்கையானதற்கு கோதுமை காரணமல்ல' - விவசாயிகள் மறுப்பு!

மகாராஷ்டிரத்தில் புல்தானா மாவட்ட மக்களின் முடி உதிர்தல் பிரச்னைக்கு கோதுமை காரணமல்ல என்று பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் கூறியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களைச் சேர்ந... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய ஆணையத் தலைவர் சந்திப்பு!

இந்தியா வந்துள்ள ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டர் லியனை பிரதமர் மோடி வரவேற்றார். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வாண்டர் லியன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தேசிய தலைநகரில் உள்ள... மேலும் பார்க்க

கொல்கத்தா கொடூரம்: நடந்தது என்ன? சிறுவன் வாக்குமூலம்!

கொல்கத்தாவில், சகோதரர்களின் மனைவிகள் மற்றும் ஒரு மகள் மரணமடைந்து, சகோதரர்கள் மற்றும் ஒரு மகன் விபத்தில் படுகாயமடைந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக, சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.14 வயது பிரதீப் தே... மேலும் பார்க்க

மணிப்பூர்: ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு நீட்டிப்பு!

மணிப்பூரில் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மணிப்பூர் ஆளுநர் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் கடந்த பிப். 13 முதல் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளது. இங்கு கலவரம் மற்று... மேலும் பார்க்க

பெங்களூரு விமான நிலையத்தில் காவலரை தாக்கிய வெளிநாட்டவர் கைது!

பெங்களூரு விமான நிலையத்தில் மத்திய தொழில்படையைச் சேர்ந்த வீரரை தாக்கிய வெளிநாட்டுப் பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், அவரை விமானத்தில் செல... மேலும் பார்க்க

பாகிஸ்தானிலிருந்து வந்த மிரட்டல்... மகாராஷ்டிர முதல்வரின் பாதுகாப்பு அதிகரிப்பு!

மகாராஷ்டிர முதல்வருக்கு பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து மிரட்டல் செய்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்த ... மேலும் பார்க்க