செய்திகள் :

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.362 கோடி: மத்திய அரசு தகவல்

post image

புதுதில்லி: கடந்த 2021 இல் இருந்து 2024 வரை பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாடு பயணங்களுக்காக ரூ.362 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓபிரையன் எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், வெளியுறவு அமைச்சகம் செலவின தரவு விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரதமர் நரேந்திர மோடி 2021 முதல் ஜூலை 2025 வரை மேற்கொண்ட அரசுமுறை வெளிநாட்டுப் பயணங்களாக 20 நாடுகளுக்கு சென்றுள்ளார். இதற்கான செலவு ரூ.295 கோடியும், 2025 பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அமெரிக்கா, பிரான்ஸ், மொரிஷியஸ், தாய்லாந்து, இலங்கை மற்றும் சவுதி அரேபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களுக்காக ரூ.67 கோடி என மொத்தம் ரூ.362 கோடி செலவிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 10 முதல் 13 வரை மோடி பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். பிரான்ஸ் பயணங்களுக்காக ரூ.25 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. அமெரிக்கா பயணங்களுக்காக ரூ.16 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 3 முதல் 6 வரை தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு மேற்கொண்ட பயணங்களுக்காக ரூ.9 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது. (தாய்லாந்து ரூ.4,92 கோடி மற்றும் இலங்கை ரூ.4,46 கோடி). ஏப்ரல் 22 முதல் 23 வரையிலான சவுதி அரேபியா பயணத்திற்காக ரூ.15,54 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மொரிஷியஸ் (மார்ச் 11-12), சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா (ஜூலை 15-19) மற்றும் கானா, டிரினிடாட் - டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா (ஜூலை 2-9) ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயண செலவு தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 பிப்ரவரி 13 முதல் 15 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தாருக்கு மேற்கொண்ட பயணங்களுக்காக ரூ.3.14 கோடி செலவிட்டுள்ளது. அதே நேரத்தில் மார்ச் 22 முதல் 23 வரை பூட்டான் பயணத்திற்காக செலவிடப்பட்ட தொகை ரூ.4.50 கோடி. ஜூன் 13 முதல் 14 வரை இத்தாலி பயணத்திற்காக ரூ.14.36 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஜூலை 8 முதல் 10 வரை ஆஸ்திரியா மற்றும் ரஷியா பயணங்களுக்காக முறையே ரூ.4.35 கோடி மற்றும் ரூ.5,34 கோடி செலவிடப்பட்டுள்ளது.

2024 ஆகஸ்ட் 21 மற்றும் 23-க்கு இடையில் மேற்கொண்ட இரண்டு வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விவரங்களையும் வெளியுறவு அமைச்சகம் பகிர்ந்துள்ளது. அதில், போலந்து பயணத்திற்காக ரூ.10.10 கோடி மற்றும் உக்ரைன் பயணத்திற்காக ரூ.2.52 கோடியும், செப்டம்பர் 3 முதல் 5 வரை புருனே பயணத்திற்காக ரூ.5,02 கோடி மற்றும் சிங்கப்பூர் பயணத்திற்காக ரூ.7.75 கோடி செலவிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 21 முதல் 23 வரையிலான அமெரிக்க பயணத்திற்காக ரூ.15.34 செலவிட்டுள்ளது, அக்டோபர் 10 முதல் 11 வரையிலான லாவோ டிபிஆர் பயணத்திற்காக ரூ.3 கோடியே 73 ஆயிரம் செலவிட்டுள்ளது, அக்டோபர் 22 முதல் 23 வரையிலான ரஷியா பயணத்திற்காக ரூ.10.75 செலவிடப்பட்டுள்ளது.

2024 நவம்பர் 16-21 வரை நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா ஆகிய நாடுகளின் பயணங்களுக்காக நைஜீரியா ரூ.4.46 கோடி, பிரேசில் ரூ.5.51 கோடி மற்றும் கயானா ரூ.5.46 கோடி செலவிடப்பட்டுள்ளது. டிசம்பர் 22 முதல் 22 வரையிலான குவைத் பயணத்திற்காக ரூ.2,54 கோடி செலவிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி 2023 மே 19 முதல் டிசம்பர் 1 வரை 11 நாடுகளுக்கு ஆறு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக ஜப்பான் (ரூ.17.19 கோடி), ஆஸ்திரேலியா (ரூ.6.06 கோடி), அமெரிக்கா (ரூ.22.89 கோடி), பிரான்ஸ் (ரூ.13.74 கோடி), தென்னாப்பிரிக்கா (ரூ.6.11 கோடி) மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணங்களுக்காக ரூ.4.28 கோடி செலவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் 2023 ஆம் ஆண்டு எகிப்து பயணத்திற்காக விளம்பரம் மற்றும் ஒளிபரப்புக்கான செலவு மட்டும் ரூ.11.90 லட்சம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு எதிராக பாஜக சதி: ராகுல் கண்டனம்!

Prime Minister Narendra Modi’s foreign visits between 2021 and July 2025 might have strengthened India’s bilateral ties with the host nations, but they have also incurred a cost of nearly Rs 362 crore to

மல்லை சத்யா குறித்து பேசி தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை: துரை வைகோ

கோவை: மல்லை சத்யா விவகாரத்தை நாங்கள் கடந்து விட்டோம், அவரைப் பற்றி பேசி தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை என மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தார். கோவை ... மேலும் பார்க்க

அசைக்க முடியாத இயக்கமாக திமுகவை மாற்றுவோம்: உதயநிதி ஸ்டாலின் சூளுரை

எந்த இயக்கத்திலும் இளைஞர் அணியில் 5 லட்சம் நிர்வாகிகள் கிடையாது, இந்தியாவிலேயே அசைக்க முடியாத இயக்கமாக நம் திமுகவை மாற்றுவோம் என சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் அணிக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்ட... மேலும் பார்க்க

ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக 2,400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதை அடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அப... மேலும் பார்க்க

நீர்பிடிப்புப் பகுதியில் மழை: திருநெல்வேலி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.நிகழாண்டு ... மேலும் பார்க்க

கார்கில் வெற்றி நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வீரவணக்கம்

கார்கில் வெற்றி நாளையொட்டி, நமது தாய்மண்ணை ஈடு இணையற்ற மனவுறுதியுடன் காத்து, உயிர்நீத்த துணிச்சல்மிகு இராணுவ வீரர்களுக்கு என் வீரவணக்கங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 1999-ஆம் ஆ... மேலும் பார்க்க

3-வது நாளாக குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக குறைந்துள்ளது. சனிக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.73,280-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில்,... மேலும் பார்க்க