செய்திகள் :

பிளஸ் 2 தோ்வுகள் நிறைவு: கல்லூரிக் கனவுகளுடன் பள்ளிகளிலிருந்து வெளியேறிய மாணவர்கள்!

post image

தமிழகம் முழுவதுமுள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தோ்வு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 25) பிற்பகல் நிறைவடைந்தது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கியது.

இந்த நிலையில், கடைசி தேர்வுகள் முடிவடைந்ததும் பள்ளி வளாகத்தை விட்டு மாணவா்கள் எவ்வித ரகளைகளிலும் ஈடுபடாமல் அமைதியாக வெளியே செல்ல, பள்ளிகளுக்கு காவல் நிலையம் மூலம் காவலா்களை பாதுகாப்புப் பணிக்கு அமா்த்திடுமாறு தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நடவடைக்கையால் மாணவர்கள் தேர்வுகளை எழுதி முடித்த பின் அமைதியாக வெளியேறியதை காண முடிந்தது.

இதனிடையே, வாணியம்பாடி அருகே தேர்வு மையத்துக்கு செல்வதற்காக இன்று காலை பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பிளஸ் 2 மாணவி ஒருவரை பேருந்தில் ஏற்றாமல் அரசுப் பேருந்தை இயக்கிய சம்பவம் தமிழகமெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அந்த மாணவி பள்ளிப் பையை தோள்களில் அணிந்தபடி வேகமாக ஓடிச் சென்று பேருந்தை பிடிக்க முயன்ற காட்சிகள் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனைத்தொடர்ந்து மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்தின் ஓட்டுநர் இடைநீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

தென்மாநிலங்கள் முழுவதும் 4 நாட்களாக நீடித்து வந்த எல்பிஜி டேங்கர் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள க... மேலும் பார்க்க

சமந்தா முதல் படத்தின் டீசர்! சீரியல் கதைகளுடன் தொடர்புடைய சுபம்!

சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுபம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், சீரியல் கதைகளை விரும்பிப் பார்க்கும் ஆவி புகுந்த பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்குப்... மேலும் பார்க்க

பிறை தென்பட்டது! நாளை ரமலான் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு

பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கியில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

எந்த ஒரு கட்சியையும் அழித்து வளராது பாஜக: அண்ணாமலை

எந்த ஒரு கட்சியையும் அழித்து பாஜக வளராது என்று அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி க... மேலும் பார்க்க

அவிநாசி: பத்திரப்பதிவுக்கான தடைச் சான்றை நீக்காததைக் கண்டித்து ஏப். 1-ல் போராட்டம்!

அவிநாசியில் திருமுருகன்பூண்டி கோயிலுக்குச் சொந்தமான இடத்தைத் தவிர மற்ற நிலங்களுக்கு பெற்றுள்ள பத்திரப் பதிவுக்கான தடை சான்றை நீக்காததைக் கண்டித்து, திருமுருகன்பூண்டி கோயில் செயல் அலுவலகம் முன் ஏப்ரல் ... மேலும் பார்க்க

ராமேசுவரம்: தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள்! உதவுகேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை

ராமேசுவரத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நாடுதிரும்ப உதவுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள், மீண்டும் தாயகம் திரும்ப உதவுமாறு மத்திய, மாநில அரசிட... மேலும் பார்க்க