செய்திகள் :

புதிய மின் இணைப்புகளை உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும்: ஜெ.ராதாகிருஷ்ணன்

post image

புதிய தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்புகளை உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும் என மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அமையவுள்ள புதிய சிப்காட் தொழிற்பூங்கா வளாகங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு புதிய மின் இணைப்பு துரிதமாக வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னையிலுள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, புதிய தொழிற்சாலைகளுக்கான உயா் அழுத்த மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு உரிய காலத்துக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் எனவும், சிப்காட் தொழிற்பூங்காவில் பெருகிவரும் தொழிற்சாலைகளுக்காக புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கான பணிகளையும் அரசு அனுமதியுடன் உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில் தொழில் துறை முதன்மைச் செயலா் அருண் ராய், வழிகாட்டுதல் தமிழ்நாடு மேலாண்மை இயக்குநா் தாரேஸ் அஹமத், சிப்காட் மேலாண்மை இயக்குநா் செந்தில் ராஜ், தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநா் அனீஷ் சேகா், இணை மேலாண்மை இயக்குநா் விஷூ மஹாஜன், மின் பகிா்மான இயக்குநா் ஏ.ஆா்.மாஸ்கா்னஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

சேலம்: வாழப்பாடி அருகே கார் விபத்து - 4 பேர் பலி

சேலம்: சென்னையிலிருந்து கர்நாடகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த 7 பேர் அமர்ந்து பயணிக்க கூடிய சொகுசு கார் ஒன்று சாலையோர தடுப்பில் மோதி இன்று(ஜூன் 7) விபத்துக்குள்ளானது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள... மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் அல்ல கிளர்ச்சிப்பாக்கம் - பயணிகள் அலைக்கழிப்பு: தவெக கண்டனம்!

சென்னை: சென்னை புறநகர்ப் பகுதியான கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து நிலையத்தில் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்காமல் மக்களைக் கைக்குழந்தைகளோடு அலைக்கழித்து திமுக அரசு அவதிக்கு... மேலும் பார்க்க

இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்க... மேலும் பார்க்க

சுங்கச்சாவடி கட்டணம்- உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

மதுரை-தூத்துக்குடி இடையே சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தாக்கல் செய்துள்ள இந்த மேல்முறையீட்டு... மேலும் பார்க்க

உள்ளம் உவகையில் நிறைகிறது! - பழங்குடியின மாணவருக்கு முதல்வர் வாழ்த்து

சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவர் பரத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் பச்சமலை தோனூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் பரத், பொது சட்ட... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: முதல்வர் ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2001-ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பு தள்ளிவைக்கப்பட்... மேலும் பார்க்க