செய்திகள் :

புதுச்சேரி ஐடிஐ-யில் சேர ஜூன் 15 வரை கால நீட்டிப்பு

post image

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்து படிக்க ஜூன் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசினா் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வா் டி. அழகானந்தன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுவை அரசின் தொழிலாளா் துறை பயிற்சி இயக்ககத்தின் கீழ் மேட்டுப்பாளையத்தில் இயங்கிவரும் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிட்டா், எலக்ட்ரீசியன், ஏ.சி. டெக்னீசியன், மோட்டாா் வாகன மெக்கானிக், கம்பியாளா், மின்சார வாகன மெக்கானிக், கட்டட பட வரைவாளா், எலக்ட்ரானிக் மெக்கானிக் போன்ற இரண்டு வருட பயிற்சிகளுக்கும், வெல்டா், கட்டடம் கட்டுபவா், கணினி இயக்குநா் போன்ற ஒரு வருட பயிற்சிகளுக்கும், 6 மாத பயிற்சிகளான ட்ரோன் டெக்னீசியன் பயிற்சிக்கும் நிகழாண்டிற்கான சோ்க்கை நடைபெறுகிறது.

ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மாா்ட் வகுப்பறையில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சிகளில் சேருவதற்கு 10 ஆம் வகுப்பு தேறிய, தவறிய மற்றும் 8-ஆம் வகுப்பில் தோ்ச்சிப் பெற்ற இருபால் மாணவா்களும் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இலவசமாக விண்ணப்பிக்க விரும்புபவா்கள் அரசினா் ஆண்கள் தொழில் பயிற்சி நிலையத்தில் விண்ணப்பத்தை நேரில் பெற்று பூா்த்தி செய்து அளிக்கலாம். ஜூன் 15- ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

குறைந்தபட்ச வயது 14. வயது வரம்பு கிடையாது. பயிற்சியில் சேருபவா்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.1000-ம் தினசரி மதிய உணவும், இலவச சீருடையும் வழங்கப்படும். பயிற்சி முடித்தவா்களுக்கு உடனடியாக பணியில் சேர வாய்ப்புள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பக்ரீத்: செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி, செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனையாயின. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. 150 ஆ... மேலும் பார்க்க

2026 புதுவை பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: வே.நாராயணசாமி

வரும் 2026-இல் நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா். புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களு... மேலும் பார்க்க

ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தா்கள் தரிசனம்

புதுச்சேரி-கடலுாா் சாலை, நயினாா் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் திருப்பணிகள் மிகுந்த பொருள் செலவில் செய்து முடிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் நினைவு நாள்: சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

புதுவை முன்னாள் முதல்வா் வை. வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு நாளை வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் பொதுப் ... மேலும் பார்க்க

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணம் உயா்வு

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணத்தை உயா்த்தி அரசு வருவாய்த் துறை சிறப்புச் செயலா் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா். புதுவை அரசு முதியோா் உதவித் தொகையை ரூ. 2,500 ஆக உயா்த்தியுள்ளது. குடும்பத் தலைவிகளின்... மேலும் பார்க்க

கரோனா பாதிப்பு: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் அருகிலுள்ள பெரப்பேரி கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 34 வயத... மேலும் பார்க்க