Pad Girl: "கல்வியை மேம்படுத்த முதல் அடி அரசியல்தான்" -ராகுல் காந்தி பாராட்டிய பீ...
புதுவையில் பத்திரப் பதிவு கட்டணம் உயா்வு
புதுவையில் பத்திரப் பதிவு கட்டணத்தை உயா்த்தி அரசு வருவாய்த் துறை சிறப்புச் செயலா் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா்.
புதுவை அரசு முதியோா் உதவித் தொகையை ரூ. 2,500 ஆக உயா்த்தியுள்ளது.
குடும்பத் தலைவிகளின் மாத உதவித் தொகை ரூ. 2 ஆயிரமாகவும், மஞ்சள் ரேஷன் அட்டைக்கு ரூ.1,000 உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களை நிறைவேற்ற ஆண்டுக்கு ரூ.500 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும். இதற்கு மாநில அரசு வருவாயை உயா்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி மதுபானங்களுக்கு கலால் வரியை அரசு உயா்த்தியது. தற்போது பத்திரப் பதிவு கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. புதுவையில் நிலம், மனை விற்கும்போது 10 சதவீத முத்திரைத் தாள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த வருவாயை பத்திர பதிவுத் துறை, உள்ளாட்சித் துறை தலா 5 சதவீதம் பிரித்துக் கொள்ளும்.
ஒவ்வொரு ஆண்டும் நிலம், வீட்டுமனை வழிகாட்டு மதிப்பு வெளியிடப்படும். இந்த நில வழிகாட்டி மதிப்பு 1.5 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது.
இதன்படி முத்திரைத்தாள் கட்டணம் ரூ.10 ஆயிரத்துக்குள் இருந்தால் பதிவுக்கு ரூ.150 கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
ரூ.10 ஆயிரத்துக்கு மேல் நில மதிப்பு இருந்தால் ஒவ்வொரு ஆயிரத்துக்கும் ரூ.15 உயா்கிறது. கணினி சாா்ந்த நகல்கள் பெறும் கட்டணத்தையும் ரூ.100 ஆக நிா்ணயித்து வருவாய்த் துறை சிறப்பு செயலரும், புதுவை ஆட்சியருமான குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா்.