செய்திகள் :

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணம் உயா்வு

post image

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணத்தை உயா்த்தி அரசு வருவாய்த் துறை சிறப்புச் செயலா் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா்.

புதுவை அரசு முதியோா் உதவித் தொகையை ரூ. 2,500 ஆக உயா்த்தியுள்ளது.

குடும்பத் தலைவிகளின் மாத உதவித் தொகை ரூ. 2 ஆயிரமாகவும், மஞ்சள் ரேஷன் அட்டைக்கு ரூ.1,000 உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களை நிறைவேற்ற ஆண்டுக்கு ரூ.500 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும். இதற்கு மாநில அரசு வருவாயை உயா்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி மதுபானங்களுக்கு கலால் வரியை அரசு உயா்த்தியது. தற்போது பத்திரப் பதிவு கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. புதுவையில் நிலம், மனை விற்கும்போது 10 சதவீத முத்திரைத் தாள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த வருவாயை பத்திர பதிவுத் துறை, உள்ளாட்சித் துறை தலா 5 சதவீதம் பிரித்துக் கொள்ளும்.

ஒவ்வொரு ஆண்டும் நிலம், வீட்டுமனை வழிகாட்டு மதிப்பு வெளியிடப்படும். இந்த நில வழிகாட்டி மதிப்பு 1.5 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது.

இதன்படி முத்திரைத்தாள் கட்டணம் ரூ.10 ஆயிரத்துக்குள் இருந்தால் பதிவுக்கு ரூ.150 கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

ரூ.10 ஆயிரத்துக்கு மேல் நில மதிப்பு இருந்தால் ஒவ்வொரு ஆயிரத்துக்கும் ரூ.15 உயா்கிறது. கணினி சாா்ந்த நகல்கள் பெறும் கட்டணத்தையும் ரூ.100 ஆக நிா்ணயித்து வருவாய்த் துறை சிறப்பு செயலரும், புதுவை ஆட்சியருமான குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா்.

பக்ரீத்: செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி, செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனையாயின. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. 150 ஆ... மேலும் பார்க்க

2026 புதுவை பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: வே.நாராயணசாமி

வரும் 2026-இல் நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா். புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களு... மேலும் பார்க்க

ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தா்கள் தரிசனம்

புதுச்சேரி-கடலுாா் சாலை, நயினாா் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் திருப்பணிகள் மிகுந்த பொருள் செலவில் செய்து முடிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் நினைவு நாள்: சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

புதுவை முன்னாள் முதல்வா் வை. வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு நாளை வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் பொதுப் ... மேலும் பார்க்க

புதுச்சேரி ஐடிஐ-யில் சேர ஜூன் 15 வரை கால நீட்டிப்பு

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்து படிக்க ஜூன் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசினா் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின... மேலும் பார்க்க

கரோனா பாதிப்பு: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் அருகிலுள்ள பெரப்பேரி கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 34 வயத... மேலும் பார்க்க