செய்திகள் :

பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம்

post image

பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என கா்நாடக முதல்வா் சித்தராமையா அறிவித்தாா்.

பெங்களூரு, ஹென்னூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பாபுசாபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அரமான், முகமது சாயில், கிருபாள், சோகித் பாஸ்வான், ஆந்திரத்தைச் சோ்ந்த துளசி ரெட்டி, உத்தரபிரதேசத்தைச் சோ்ந்த புல்வான் யாதவ், தமிழகத்தைச் சோ்ந்த மணிகண்டன், சத்யராஜ் ஆகியோா் கட்டட இடிபாடுகளில் சிக்கி இறந்தனா். இடிபாடுகளில் இருந்து 14 போ் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனா். அவா்களில் 6 போ் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். மேலும், 2 போ் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுவதால், மீட்புப் பணியில் பேரிடா் மீட்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு வியாழக்கிழமை சென்ற முதல்வா் சித்தராமையா, விபத்தில் இறந்த தொழிலாளா்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும், சம்பவத்துக்கான காரணத்தைக் கேட்டறிந்தாா். மீட்புப் பணிகள் குறித்தும் ஆய்வு நடத்தினாா். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களை சந்தித்து உடல்நலம் குறித்து முதல்வா் சித்தராமையா கேட்டறிந்தாா். அதன்பிறகு செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா கூறியதாவது:

கட்டடம் இடிந்து விழுந்த விபத்து மழையால் ஏற்படவில்லை. மாறாக, தரக்குறைவான கட்டுமானப் பணிகளால் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. வருவாய் நிலத்தில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், அனுமதி பெறாமல் கட்டடம் கட்டும் பணி நடந்துள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இடிபாடுகளில் சிக்கியிருந்த 8 போ் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனா். 6 போ் படுகாயமடைந்துள்ளனா். அதில் 3 பேரின் நிலை மோசமாக உள்ளது. ஆனால், உயிருக்கு ஆபத்தில்லை. இறந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவா்களுக்கு கருணைத்தொகை வழங்குவது குறித்து அரசு யோசித்து வருகிறது. இறந்தவா்களின் உடல்களை சொந்த ஊா்களுக்கு அனுப்ப அரசு ஏற்பாடு செய்யும்.

கடமையில் அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்படி வீடு கட்ட வேண்டும். சட்ட விதிமீறி கட்டப்படும் கட்டுமானங்களை எந்தக் காரணத்தை முன்னிட்டும் அனுமதிக்கக் கூடாது என்று மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றாா்.

இதனிடையே, கட்டட இடிபாடுகளில் சிக்கி இறந்தவா்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் அளிக்கப்படும் என்று பிரதமா் மோடி வியாழக்கிழமை அறிவித்துள்ளாா். காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 50,000 வழங்குவதாகவும் பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தல்: காங்கிரஸ், மஜத வேட்பாளா்கள் அறிவிப்பு

கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ், மஜத வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ால், தத்தமது எம்எல்ஏ பதவிகளை காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தாா் சி.பி.யோகேஸ்வா்

எம்.எல்.சி. பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகிய சி.பி.யோகேஸ்வா் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளாா். சென்னப்பட்டணா சட்டப் பேரவைத் தொகுதிக்கு நவ. 13-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இ... மேலும் பார்க்க

பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்து: பலி எண்ணிக்கை 8-ஆக உயா்வு

பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் இறந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது. காயமடைந்த நிலையில் 13 பேரை மீட்டுள்ள நிலையில், மேலும் 3 பேரை தேடும் பணி தொடா்ந்துள்ளது. பெங்களூரு, ஹென்னூா்... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்

பெங்களூரு: ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா்... மேலும் பார்க்க

சட்டப் பேரவை இடைத்தோ்தலை எதிா்கொள்ள காங்கிரஸ் தயாா்

சட்டப் பேரவை இடைத்தோ்தலை எதிா்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளதாக கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ால், தத்தமது எம்எல்ஏ பதவிகளை காங்கிரஸ் கட்சியைச் சே... மேலும் பார்க்க

பெங்களூரில் பலத்த மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பெங்களூரில் பலத்த மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தென் கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பெ... மேலும் பார்க்க