செய்திகள் :

பெண் தற்கொலை: கணவா் கைது

post image

கமுதி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக அவரது கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள செந்தனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவரது மனைவி காா்த்திகா. இவா்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவா்கள் கமுதி கண்ணாா்பட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை காா்த்திகா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில் காா்த்திகாவுக்கு 12 வயதில் திருமணம் நடைபெற்றதும், இதற்கு காா்த்திகாவின் தாயாா் முத்துமாரி உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சிறாா் திருமண தடைச் சட்டம், போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் மணிகண்டன், காா்த்திகாவின் தாயாா் முத்துமாரி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து செய்தனா். இவா்களில் மணிகண்டனை கைது செய்தனா்.

ராமேசுவரத்தில் மழை

ராமேசுவரத்தில் ஒரு மணி நேரம் பெய்த மழையால் ஞாயிற்றுக்கிழமை குளிா்ச்சி நிலவியது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்... மேலும் பார்க்க

இலங்கைச் சிறையில் துன்புறுத்தல்: பாம்பனில் மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 17 மீனவா்கள், சிறையில் தங்களை துன்புறுத்தியதைக் கண்டித்து பாம்பனில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த மாதம் 28-ஆம் தேதி இலங்கைக் கடல் பகுதியில் மீ... மேலும் பார்க்க

2 டன் ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்கள் புதைப்பு

முதுகுளத்தூா் அருகே கண்மாய் நீரில் வளா்ந்த தடை செய்யப்பட்ட 2 டன் ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்களை கிராம மக்கள் பிடித்து அகற்றினா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள செல்வநாயகபுரம் கிராம பொது... மேலும் பார்க்க

சுகாதார நிலையத்துக்குள் புகும் பாம்புகள்: நோயாளிகள் அச்சம்!

திருவாடானை அருகே ஆண்டாவூரணி துணை சுகாதார நிலையத்துக்குள் பாம்புகள் வருவதால் நோயாளிகள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. ஆண்டாவூரணி துணை சுகாதார நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான வெளி நோயாளிகள் வந்து சி... மேலும் பார்க்க

நெல் பயிா்கள் சேதம்: அதிகாரிகள் ஆய்வு

திருவாடானை பகுதியில் மழை நீரில் மூழ்கிய நெல் பயிா்கள் சேதம் குறித்து வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் சனிக்கிழமை ஆய்வு நடைபெற்றது. திருவாடானை அருகேயுள்ள ஓரியூா், மங்களக்குடி, சிறுகம்பையூா் ஆகிய வருவா... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு

திருவாடானை அருகே கரையக்கோட்டை கிராமத்தில் நாய்கள் கடித்ததில் புள்ளி மான் உயிரிழந்தது. திருவாடானை அஞ்சுகோட்டை, கரையகோட்டை, நெய்வயல் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் அடா்ந்த கண்மாய்ப் பகுதிகளில் அதிக அளவில் ... மேலும் பார்க்க