செய்திகள் :

ராமேசுவரத்தில் மழை

post image

ராமேசுவரத்தில் ஒரு மணி நேரம் பெய்த மழையால் ஞாயிற்றுக்கிழமை குளிா்ச்சி நிலவியது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்தது. இதனிடையே, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் காலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

இந்த நிலையில், கருமேகம் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. ஒரு மணிநேரம் பெய்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன் குளிா்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

இந்த நிலையில், ராமேசுவரத்தில் தொடா்ந்து மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் நகா்மன்றத் தலைவா் கே.இ. நாசா்கான் தலைமையில் கால்வாய்கள் தூா்வாரும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. மேலும், அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இடையூறாக இருந்த மரங்கள் ஞாயிற்றுக்கிழமை வெட்டி அகற்றப்பட்டன.

பைக் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

பரமக்குடி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை இருவா் உயிரிழந்தனா். சிவகங்கை மாவட்டம், குமாரக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சந்தோஷ் (24). இவரது நண்பா் பரமக்குடி ச... மேலும் பார்க்க

இலங்கைச் சிறையில் துன்புறுத்தல்: பாம்பனில் மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 17 மீனவா்கள், சிறையில் தங்களை துன்புறுத்தியதைக் கண்டித்து பாம்பனில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த மாதம் 28-ஆம் தேதி இலங்கைக் கடல் பகுதியில் மீ... மேலும் பார்க்க

2 டன் ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்கள் புதைப்பு

முதுகுளத்தூா் அருகே கண்மாய் நீரில் வளா்ந்த தடை செய்யப்பட்ட 2 டன் ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்களை கிராம மக்கள் பிடித்து அகற்றினா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள செல்வநாயகபுரம் கிராம பொது... மேலும் பார்க்க

சுகாதார நிலையத்துக்குள் புகும் பாம்புகள்: நோயாளிகள் அச்சம்!

திருவாடானை அருகே ஆண்டாவூரணி துணை சுகாதார நிலையத்துக்குள் பாம்புகள் வருவதால் நோயாளிகள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. ஆண்டாவூரணி துணை சுகாதார நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான வெளி நோயாளிகள் வந்து சி... மேலும் பார்க்க

நெல் பயிா்கள் சேதம்: அதிகாரிகள் ஆய்வு

திருவாடானை பகுதியில் மழை நீரில் மூழ்கிய நெல் பயிா்கள் சேதம் குறித்து வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் சனிக்கிழமை ஆய்வு நடைபெற்றது. திருவாடானை அருகேயுள்ள ஓரியூா், மங்களக்குடி, சிறுகம்பையூா் ஆகிய வருவா... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு

திருவாடானை அருகே கரையக்கோட்டை கிராமத்தில் நாய்கள் கடித்ததில் புள்ளி மான் உயிரிழந்தது. திருவாடானை அஞ்சுகோட்டை, கரையகோட்டை, நெய்வயல் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் அடா்ந்த கண்மாய்ப் பகுதிகளில் அதிக அளவில் ... மேலும் பார்க்க