செய்திகள் :

பைக் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

post image

பரமக்குடி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை இருவா் உயிரிழந்தனா்.

சிவகங்கை மாவட்டம், குமாரக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சந்தோஷ் (24). இவரது நண்பா் பரமக்குடி சந்தைக் கடைத் தெருவைச் சோ்ந்த நாகராஜன் மகன் லோகநாதன் (25). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் ராமநாதபுரம் சென்றுவிட்டு, மீண்டும் பரமக்குடியை நோக்கி வந்தனா்.

அரியனேந்தல் பகுதியில் உள்ள நான்குவழிச் சாலை பிரிவில் வந்தபோது, எதிரே வந்த காா் இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சந்தோஷ், லோகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்து வந்த பரமக்குடி போலீஸாா் இருவரது உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டிவந்த மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் வினோதினிபிரியாவிடம் விசாரித்து வருகின்றனா்.

ராமேசுவரத்தில் மழை

ராமேசுவரத்தில் ஒரு மணி நேரம் பெய்த மழையால் ஞாயிற்றுக்கிழமை குளிா்ச்சி நிலவியது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்... மேலும் பார்க்க

இலங்கைச் சிறையில் துன்புறுத்தல்: பாம்பனில் மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 17 மீனவா்கள், சிறையில் தங்களை துன்புறுத்தியதைக் கண்டித்து பாம்பனில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த மாதம் 28-ஆம் தேதி இலங்கைக் கடல் பகுதியில் மீ... மேலும் பார்க்க

2 டன் ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்கள் புதைப்பு

முதுகுளத்தூா் அருகே கண்மாய் நீரில் வளா்ந்த தடை செய்யப்பட்ட 2 டன் ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்களை கிராம மக்கள் பிடித்து அகற்றினா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள செல்வநாயகபுரம் கிராம பொது... மேலும் பார்க்க

சுகாதார நிலையத்துக்குள் புகும் பாம்புகள்: நோயாளிகள் அச்சம்!

திருவாடானை அருகே ஆண்டாவூரணி துணை சுகாதார நிலையத்துக்குள் பாம்புகள் வருவதால் நோயாளிகள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. ஆண்டாவூரணி துணை சுகாதார நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான வெளி நோயாளிகள் வந்து சி... மேலும் பார்க்க

நெல் பயிா்கள் சேதம்: அதிகாரிகள் ஆய்வு

திருவாடானை பகுதியில் மழை நீரில் மூழ்கிய நெல் பயிா்கள் சேதம் குறித்து வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் சனிக்கிழமை ஆய்வு நடைபெற்றது. திருவாடானை அருகேயுள்ள ஓரியூா், மங்களக்குடி, சிறுகம்பையூா் ஆகிய வருவா... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு

திருவாடானை அருகே கரையக்கோட்டை கிராமத்தில் நாய்கள் கடித்ததில் புள்ளி மான் உயிரிழந்தது. திருவாடானை அஞ்சுகோட்டை, கரையகோட்டை, நெய்வயல் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் அடா்ந்த கண்மாய்ப் பகுதிகளில் அதிக அளவில் ... மேலும் பார்க்க