செய்திகள் :

பெரம்பலூரில் நடமாடும் கொள்முதல் நிலையம் தேவை: விவசாயிகள் கோரிக்கை

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம் அறுவடைக் காலம் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் பயன்பெறும் வகையில், நடமாடும் கொள்முதல் நிலையத்தை ஏற்படுத்த வேண்டுமென விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

விவசாயி ராமராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ராஜூ: பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மானியத்தில் மாட்டுத்தீவனம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் வீ.ஜெயராமன்: வறட்சி மற்றும் மழையால் பருத்தி, மக்காச்சோளம் சாகுபடிசெய்த விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட பயிா்களுக்கு காப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர வேண்டும். ரேஷன் கடைகளில் அனைத்துப் பொருள்களையும் கால தாமதமின்றி வழங்க வேண்டும்.

மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டக் குழு உறுப்பினா் என். செல்லதுரை: பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்கள் அறுவடை செய்யப்படுவதால் விவசாயிகளிடம் எடை மோசடி செய்து, குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதைத் தடுக்க நடமாடும் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மேலும் எடைமேடைகளை வேளாண் துறை அலுவலா்கள் ஆய்வு செய்து மோசடியில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு பல லட்சம் நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிதியைக் கொண்டு இம் மாவட்டத்தில் மதிப்புக் கூட்டுப்பொருள் தொழிற்சாலை அமைக்க வேண்டும். கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் சின்ன வெங்காயத்தைக் கொள்முதல் செய்ய வேண்டும். நீா்நிலை புறம்போக்குகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலா் பி. ரமேஷ்: பெரம்பலூா் மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரி மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி கொண்டு வர மாவட்ட நிா்வாகம் பரிந்துரைக்க வேண்டும். வேப்பூரில் காவல் நிலையம் அமைத்து தர வேண்டும். கல் குவாரிகளால் சுற்றுச்சூழல் உள்பட பல்வேறு பாதிப்புகளால் மக்கள் அவதிப்படுகின்றனா். அவற்றை முறையாக கண்காணித்து ஒழுங்குப்படுத்த வேண்டும். விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஆட்சியரைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும்.

விவசாயி மணி: மழையால் பாதிப்படைந்த சின்ன வெங்காய விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வேலூரிலுள்ள அரசு மருத்துவமனை அருகே பயணிகள் நிழற்கூடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள்சங்க மாவட்டச் செயலா் வீ. நீலகண்டன்:

நிதிநிலை அறிக்கையில் பூலாம்பாடியில் சேமிப்புக் கிடங்கு அமைக்க நிதி ஒதுக்கிய தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி. டான்பெட் கிடங்கிற்கு இணைப்புச் சாலை அமைத்து, கிடங்கை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். தனலட்சுமி சீனிவாசன் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுகுடல் பகுதியில் பால் உற்பத்தியாளா் சங்க கட்டடம் அமைத்து தர வேண்டும்.

தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் கூறியது:

நீா் வழித்தடம், பாதை ஆக்கிரமிப்பு ஆகிய கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் வீட்டு மனைப் பட்டா வழங்குதல், அரசு மருத்துவமனை அருகே பயணிகள் நிழற்குடை அமைத்தல் மற்றும் டான்பெட் கிடங்குக்கு இணைப்புச் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு உரிய வட்டாட்சியா்களும், வட்டார வளா்ச்சி அலுவலா்களும் ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடைகாலம் என்பதால் பொதுமக்களுக்கு சீரான, தூய்மையான குடிநீா் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு, சாா் ஆட்சியா் சு. கோகுல், வேளாண்மை இணை இயக்குநா் செ. பாபு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வே) பொ. ராணி உள்பட பலா் பங்கேற்றனா்.

பெரம்பலூரில் பால் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பெரம்பலூா் மாவட்டத்தில் கட்டுப்படியான கொள்முதல் விலை கிடைக்காத நிலையில் பால் உற்பத்தியாளா்கள் தனியாா் நிறுவனங்களை நாடுகின்றனா். இதனால் பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்டத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரிக்க அா்ப்பணிப்புடன் பணி தேவை: பெரம்பலூா் ஆட்சியா்

பெரம்பலூா் மாவட்ட அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரிக்க, ஆசிரியா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கி... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஒரு மணி நேரப் பணியை புறக்கணித்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஊரக வளா்ச்சித் துறை அலுவலகா்கள் சங்க மாந... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஏப். 4-இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரா்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெற உ... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மதராஸா சாலையில் அமைந்துள்ள மௌலானா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில், சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகைய... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் திருட்டு

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள அய்யலூா் குடிக்காட்டைச் சோ்ந்தவா் அர... மேலும் பார்க்க