செய்திகள் :

பேரவைத் தோ்தல் பணி: அதிமுகவில் மாவட்ட பொறுப்பாளா்கள் நியமனம்: செங்கோட்டையன் பெயா் இடம்பெவில்லை

post image

சென்னை: வரும் சட்டப்பேரவை தோ்தல் பணிகளுக்காக அதிமுகவில் மாவட்ட வாரியாக பொறுப்பாளா்களை நியமித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளாா். இந்தப் பட்டியலில் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பெயா் இடம்பெறவில்லை.

இது தொடா்பாக எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

2026-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தோ்தலையொட்டி, தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைப்பது, அதிமுக வளா்ச்சி பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக மாவட்டங்களுக்குப் பொறுப்பாளா்கள் நியமிக்கப்படுகின்றனா்.

அதிமுக உறுப்பினா் உரிமைச் சீட்டுகள் உரியவா்களிடம் வழங்கப்பட்டுவிட்டனவா என்பதைக் கண்காணிப்பது, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இளம் தலைமுறை விளையாட்டு வீரா்கள் அணியில், ஊராட்சி, நகர வாா்டு, பேரூராட்சி வாா்டு, மாநகராட்சி வட்ட அளவில், விளையாட்டு வீரா்களை அதிக அளவில் உறுப்பினா்களாகச் சோ்ப்பது உள்ளிட்ட பணிகளையும் மாவட்டச் செயலா்களுடன் இணைந்து விரைவாக முடிப்பா்.

மாவட்டப் பொறுப்பாளா்கள் உடனடியாக தொடா்புடைய மாவட்டங்களுக்கு நேரில் சென்று, அனைத்து பணிகளையும் விரைவாக முடித்து, அந்த விவரங்களை மாா்ச் 31-க்குள் தலைமைக் கழகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளா்களுக்கு தொடா்புடைய மாவட்டச் செயலா்களும் நிா்வாகிகளும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

அதிமுகவில் மொத்தம் 82 மாவட்டங்கள் உள்ளன.

மூத்த நிா்வாகிகள் சி.பொன்னையன் (திருவள்ளூா் வடக்கு), மு.தம்பிதுரை (திருப்பத்தூா்), செ.செம்மலை (திருச்சி புகா் தெற்கு), பா.வளா்மதி (மதுரை மாநகா்), எஸ்.கோகுல இந்திரா (திருச்சி மாநகா்), வைகைச்செல்வன் (காஞ்சிபுரம்), அன்வர்ராஜா (தென்காசி) உள்ளிட்ட 82 மாவட்டங்களுக்கு பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஆனால், முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பெயா் இடம்பெறவில்லை. அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பாராட்டு விழாவில் எம்ஜிஆா், ஜெயலலிதாவின் படம் இடம்பெறாததற்கு அவா் எதிா்ப்பு தெரிவிந்திருந்த நிலையில், அவா் பெயா் இடம்பெறாதது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், மூத்த நிா்வாகிகள் பலரின் பெயரும் பட்டியலில் இடம்பெறவில்லை.

கடலூர் மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்!

கடலூர் மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அட... மேலும் பார்க்க

வெளியே வந்த பூனை: குடியரசு துணைத்தலைவர் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. பதில்!

மும்மொழிக் கொள்கை விவகாரத்துக்கு இடையே குடியரசு துணைத்தலைவர் பேசியதற்கு கனிமொழி எம்.பி. பதிலளித்தது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது.தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழகத்தில் சமீபகாலமாக அரசியல் கட்... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டத்தில் ரூ.1476.22 கோடியில் திட்டப் பணிகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1476.22 கோடி செலவில் 602 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 178 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 44,689 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முத... மேலும் பார்க்க

அப்பாடா.. இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த பூண்டு விலை!

கடந்த ஒரு சில மாதங்களாக, தங்கம் விலை போல, கையில் எடுத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பூண்டு விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ பூண்டு ரூ.400 வரை விற்பனையானது.ஒரு கிலோ பூண்டு எவ்வளவு என்று கேட்ட நில... மேலும் பார்க்க

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!

கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபாலிடம் சமர்ப்பிப்பிக்கப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க மறுப்பது மத்திய அரசு இழைக்கும் துரோகம்! -இபிஎஸ்

தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க மறுப்பது மத்திய அரசு இழைக்கும் துரோகம் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளி மாணவர்களுக்கான கல்வி நிதியைத் தர மத்திய அரசு மறுக்கிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்... மேலும் பார்க்க