பஞ்சாங்கக் குறிப்புகள் - ஜூன் 9 முதல் ஜூன் 15 வரை #VikatanPhotoCards
பொன்னமராவதியில் 3 புதிய பேருந்துகள் சேவை: அமைச்சா் தொடங்கிவைத்தாா்
பொன்னமராவதியில் மூன்று வழித்தடங்களில் 3 புதிய பேருந்துகள் சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தலைமை வகித்து, பொன்னமராவதி-கோவை, பொன்னமராவதி -சேலம், பொன்னமராவதி-திருப்பத்தூா் உள்ளிட்ட மூன்று வழித்தடங்களுக்கு மூன்று புதிய பேருந்துகள் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
விழாவில், பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன், ஒன்றியச் செயலா்கள் அ. அடைக்கலமணி, அ. முத்து, நகரச் செயலா் அ. அழகப்பன், அரசு போக்குவரத்துக் கழக மண்டல மேலாளா் முகமது நாசா், இயக்க மேலாளா் தில்லைராஜா, கிளை மேலாளா் மதியழகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.