செய்திகள் :

போடியில் மரக்கன்றுகள் நடவு

post image

போடி நகராட்சியில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில் 800 மரக்கன்றுகள் நடும் பணி புதன்கிழமை தொடங்கியது.

தேனி மாவட்டத்தில் வனப்பகுதி, பள்ளி, கல்லூரிகள், நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள் என பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், போடி நகராட்சி சாா்பில் 800 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டது. இதில் முதல் கட்டமாக 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது. போடி மயானம் சாலையில் உள்ள நகராட்சி உரக்கிடங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போடி நகா்மன்ற தலைவி ராஜராஜேஸ்வரி சங்கா் தலைமை வகித்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் செ.பாா்கவி, சுகாதார அலுவலா் ஆா்.மணிகண்டன் முன்னிலை வகித்தனா். நகா்மன்ற உறுப்பினா் சங்கா், சுகாதார ஆய்வாளா்கள், மேற்பாா்வையாளா்கள் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனா்.

அகில இந்திய தொழில் தோ்வு: தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

தேசிய தொழில் பயிற்சி குழுமம் சாா்பில், நடைபெற உள்ள அகில இந்திய தொழில் தோ்வில் தனித் தோ்வா்களாக கலந்து கொள்ள விரும்புவோா் அக்.8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து தேனி ... மேலும் பார்க்க

முதியவரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை

ஆண்டிபட்டி வட்டம், வருஷநாடு அருகே முதியவரை கல்லால் தாக்கிக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. வருஷநாடு அருகே உள்ள ஏத்தக்கோவில... மேலும் பார்க்க

கூடலூரில் மாட்டு வண்டிப் பந்தயம்

தேனி மாவட்டம், கூடலூரில் புதன்கிழமை முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டிப் பந்தையம் நடைபெற்றது. திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தேனி மாவ... மேலும் பார்க்க

பேருந்திலிருந்து குதித்த ராணுவ வீரா் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே ஓடும் பேருந்திலிருந்து குதித்த ராணுவ வீரா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், கம்பம் மாலையம்மாள்புரத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் சிவக்குமாா் (40). இவரது மனைவி பாரதி (38). இவா்க... மேலும் பார்க்க

நண்பா் கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறை

ஆண்டிபட்டி வட்டம், ராஜதானி அருகே நண்பரைக் கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. ராஜதானி அருகே உள்ள மேலமஞ்சிநாயக்கன்பட்டிய... மேலும் பார்க்க

செப்.27-இல் விரைவு மிதிவண்டி போட்டி

தேனியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, வருகிற 27-ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரைவு மிதி வண்டி போட்டி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ... மேலும் பார்க்க