செய்திகள் :

போதைப் பொருள் வாட்ஸ் ஆப் குழு: கிருஷ்ணாவுடன் இருந்த நடிகர்கள் யார்?

post image

நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் போதைப் பொருள் தொடர்பான வாட்ஸ் ஆப் குழுவில், சினிமா பிரபலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மற்றும் அவரது குழுவிடம் இருந்து போதைப் பொருள் வாங்கி பயன்படுத்திய வழக்கில் தமிழ் திரை நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரைத் தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ணா ஆகிய இருவரும் நுங்கம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக நடிகர் ஸ்ரீ கிருஷ்ணாவின் செல்போனை கைப்பற்றி சைபர் போலீஸார் உதவியுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அவரது செல்போனில் அழிக்கப்பட்ட குறுந்தகவலை மீட்டு வாட்ஸ் ஆப் குழுக்களையும் ஆய்வு செய்தனர்.

அப்போதும, வாட்ஸ் ஆப்பில் கிருஷ்ணா அவரது நண்பர்களுடன் போதைப் பொருள் தொடர்பான விவரங்களை கோட் வேர்டில் பேசியதும், மேலும் வாட்ஸ் ஆப் குழுக்களில் நேரம், இடம் ஆகியவற்றை பகிர்ந்து போதைப் பொருளை பயன்படுத்தி வந்ததும் போலீஸார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அந்த வாட்ஸ் ஆப் குழுவில் 10 நபர்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது, அவர்கள் கிருஷ்ணாவின் கல்லூரி நண்பர்கள் மற்றும் திரை உலக நண்பர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இவர்கள் இந்த வாட்ஸ்ஆப் குழு மூலமாக பல்வேறு போதைப் பொருள் விருந்துகளை நடத்தி வந்துள்ளனர்.

இதனால், அந்த குழுவில் இருந்த மற்றவர்களும் போதைப் பொருளை பயன்படுத்தி இருப்பார்கள் என்ற நோக்கத்தில் அனைவருக்கும் நுங்கம்பாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பி நேரடியாக வரவைத்து விசாரணை நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.

மேலும், இந்த விசாரணையின் மூலம் அவர்கள் வேறு யாருக்காவது போதைப் பொருள்களை விற்பனை செய்து உள்ளார்களா அல்லது அவர்களுடன் இணைந்து வேறு யாராவது பயன்படுத்தி உள்ளார்களா என்பது தெரியவரும் எனவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

அதேபோல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரசாத், பிரதீப், மற்றும் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஸ்ரீ கிருஷ்ணா ஆகியோரையும் போலீஸ் காவாலில் எடுக்க நுங்கம்பாக்கம் போலீஸார் திட்டமிட்டு வருகின்றனர்.

It has been revealed that a WhatsApp group related to drugs on actor Krishna's cell phone includes film celebrities.

இதையும் படிக்க: சென்னை ஐஐடியில் மாணவிக்குப் பாலியல் தொல்லை: வடமாநில இளைஞர் கைது!

பருத்திக்கு விவசாயிகளுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்!

பருத்திக்கு உரிய விலை பெற அதனை தரம்பிரித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்குக் கொண்டுவந்து விற்பனை செய்து விவசாயிகள் பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற... மேலும் பார்க்க

நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், நான் எந்த தவறும் செய்யவில்லை, என்னிடம் இருந்து போதைப்பொருள் ... மேலும் பார்க்க

திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் நாளை ஆலோசனை!

முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் நாளை(ஜூன் 28) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அண... மேலும் பார்க்க

ஜூலை 7-ல் அமித் ஷா சென்னை வருகை! ஆனால், இபிஎஸ் இல்லை?

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகை நாளிலேயே எடப்பாடி பழனிசாமியும் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.தமிழகத்தில் பாஜகவுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் அக்கட்சித் தலைமை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று(ஜூன் 27) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், பு... மேலும் பார்க்க

கைதாகிறாரா எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி ?

சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் தலைவர் ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் கிராமத்தைச் ... மேலும் பார்க்க