ஹோலி கொண்டாடிய மாணவர்களுக்கு நோட்டீஸ்: சர்ச்சையில் பாகிஸ்தான் பல்கலைக்கழகம்
மகா கும்பமேளா: 62 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்!
ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 62 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா் என அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ஆக்ராவில் உள்ள யூனிகார்ன் நிறுவனங்கள் மாநாட்டில் விருந்தினர்களை வரவேற்ற முதல்வர் யோகி, "இந்த நேரத்தில், மகா கும்பமேளா மக்களை ஈர்க்கும் ஒரு இடமாக இருப்பதால், இதை ஸ்டார்ட்அப் உலகின் யூனிகார்ன் மகா கும்பமேளா என்று நான் அழைக்க முடியும்" என்றார்.
மேலும், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இதுபோன்று மக்கள் ஒன்றுகூடுவது ஒரு "அரிய" நிகழ்வு என்று யோகி தெரிவித்தார்.
மதத்தை கேலி செய்து மக்களை பிளவுபடுத்துவதா? பிரதமர் மோடி
"இதுவரை, 62 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் இந்த நூற்றாண்டின் அரிய நிகழ்வுகளில் ஒன்றாகும். நாட்டின் இந்த பாரம்பரியம் பண்டைய காலங்களிலிருந்து நாட்டின் நான்கு முக்கியமான இடங்களில் இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கான ஏற்பாட்டிற்கு வழிவகுத்துள்ளது," என்று யோகி கூறினார்.
இதற்கிடையில், மகா கும்பமேளாவை நிர்வகிக்கும் அதிகாரிகள், மகா சிவராத்திரி நாளான பிப்ரவரி 26 ஆம் தேதி மகா கும்ப புனித நீராடல் நடைபெறுவதை முன்னிட்டு, பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பல்வேறு கட்ட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அயோத்தி தாம் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என துணை காவல் கண்காணிப்பாளர் யஷ்வந்த் சிங் தெரிவித்தார்.
மகா சிவராத்திரி நாளான பிப்ரவரி 26 ஆம் தேதி வரை மகா கும்பமேளா நடைபெறவுள்ளது.