செய்திகள் :

மஞ்சள் காமாலை : எதனால் ஏற்படுகிறது, குணப்படுத்துவது எப்படி? - விரிவான தகவல்கள்

post image

ல்லீரல்... மனித உடலின் மிக முக்கிய உள்உறுப்பு. நம் உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றுதல், செரிமானத்துக்குத் தேவையான உயிர்வேதியியல் பொருள்களை உற்பத்தி செய்தல் போன்ற முக்கியமான வேலைகளைச் செய்வது கல்லீரல்தான். ரத்தத்தில் உள்ள புரதம், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைச் சீராக வைத்துக்கொள்வதும் இந்த உறுப்புதான். உடலில் மற்ற உறுப்புகளைவிட இது தனித்தன்மை வாய்ந்தது. காரணம், இது இழந்த திசுக்களை தானே மீட்டுருவாக்கம் செய்துக்கொள்ளக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்கிறது. 75 சதவிகிதம் பாதிப்புக்குள்ளானாலும்கூட தன் வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டேதான் இருக்கும். ஏறக்குறைய, பாதியளவு பாதிக்கப்பட்ட பின்னர்தான் இதன் பாதிப்பே வெளியில் தெரியவரும். அதுவும், ஒரு சில அறிகுறிகளின் மூலமாகவே தெரியவரும். அதில் ஒரு முக்கியமான அறிகுறிதான் மஞ்சள் காமாலை. 

 ``கல்லீரல் ஒழுங்காகச் செயல்படாததால் ஏற்படக்கூடிய மஞ்சள் காமாலை, கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறாமல் தேங்கிவிடுவதால் வரக்கூடியது என, இரண்டுவிதமான காமாலைகள் உண்டு" என்கிறார் மருத்துவர் விவேகானந்தன்.

பித்தம்

``கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறி, பித்தப்பைக்குச் சென்று சேர்ந்து, பித்தக்குழாய் வழியாகக் குடலுக்குச் சென்றுவிட வேண்டும். அப்படிச் செல்லாமல் கல்லீரலிலேயே தேங்கிவிட்டால் மஞ்சள் காமாலை உண்டாகும். பித்தப்பைக் கல், பித்தப்பைப் புற்றுநோய், பித்தக்குழாய் புற்றுநோய், கணையப் புற்றுநோய், குடலின் முதற்பகுதியான டியோடினம் (Duodenum) பகுதியில் புற்றுநோய் போன்ற பாதிப்புகளால் பித்தம் வெளியேறாமல் தேங்கிவிடும். அப்படிப் பாதிக்கப்படும்போது காமாலை உண்டாகும்.

கல்லீரலில் இருக்கிற செல்கள் செயல்படாததால் வரக்கூடிய மஞ்சள் காமாலையை 'ஹெப்பட்டோ செல்லுலர் ஜான்டிஸ் (Hepatocellular jaundice)' என்று சொல்வார்கள். இதை 'மெடிக்கல் ஜான்டிஸ்' என்றும் அழைக்கலாம். இது வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. 'ஹெப்படைட்டிஸ்' வைரஸ் கிருமிகளின் பாதிப்பு, மது அருந்துதல் போன்ற காரணங்களால் வரலாம். 

சிலர் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் பூச்சி மருந்து குடிப்பார்கள். அவர்களுக்கும் வரலாம். டி.பி போன்ற பாதிப்புகளுக்கு மாத்திரை சாப்பிட்டு கல்லீரல் பாதிப்படைந்தவர்களுக்கும் இந்த வகை காமாலை வரும். நம் நாட்டைப் பொறுத்தவரை, வைரஸ், மது, கொழுப்பு சார்ந்த ஈரல் நோய்கள், சில மாத்திரை மருந்துகளால் இந்தப் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. 

மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலை

'ஹெப்படைட்டிஸ்' வைரஸ்

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டால், சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும், கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறும். பாதிப்பு அதிகமாகிவிட்டால் பித்தப்பை உப்புக்கள் தோலில் படிந்து அரிப்பு உண்டாகும். 

மஞ்சள் காமாலை குறித்து நம் மக்களிடத்தில் போதிய விழிப்பு உணர்வு இல்லை. 'ஹெப்படைட்டிஸ்' வைரஸ் கிருமித் தொற்றால் உருவாகக்கூடிய மஞ்சள் காமாலையால் அதிகமான மக்கள் உயிரிழக்கிறார்கள். இது எய்ட்ஸ் பாதிப்பால் உயிரிழப்பவர்களைவிட அதிகம். பாதிக்கப்பட்டவர்களில் கிட்டதட்ட 90 சதவிகிதத்துக்கும் மேலானவர்களுக்குத் தங்களுக்கு பாதிப்பு இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள். 

மஞ்சள் காமாலை பாதிப்பு இருக்கும் பலர், அதை அறியாமல் வெறும் உடல் சூடுதான் என்று கவனிக்காமல் இருந்துவிடுகிறார்கள். வெயிலால், உடல் சூட்டால் சிறுநீர் மஞ்சளாக வெளியேறினால் ஒரு நாளில் சரியாகிவிடும். கண்கள் மஞ்சளாக மாறாது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். ரத்தப் பரிசோதனை மற்றும் அல்ட்ராசோனிக் பரிசோதனைகளின் மூலமாக இதைக் கண்டறிய முடியும்.

Liver functioning test

'ரத்தப் பரிசோதனையின் மூலமாக, பாதிப்பு எவ்வளவு இருக்கிறது', 'கல்லீரல் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது' (Liver functioning test) என்பதைக் கண்டறியலாம். அதுதவிர, எந்த வகை என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். 

ஹெப்படைட்டிஸ்-ஏ அல்லது இ வைரஸ் பாதிப்பால் உருவாகும் மஞ்சள் காமாலை ஒருவாரத்தில் சரியாகிவிடும். சி - வைரஸ் பாதிப்பு என்றால் குறைந்தது மூன்று மாதங்களாவது மருந்து, மாத்திரைகள் சாப்பிட வேண்டும். ஹெப்படைட்டிஸ்- பி வைரஸ் பாதிப்பு என்றால் ஒரு வருடத்துக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். சிலர் வாழ்நாள் முழுவதும்கூட சாப்பிட வேண்டிய சூழல்வரும். மது அருந்தியதால் உண்டான மஞ்சள் காமாலை என்றால் மது அருந்துவதை நிறுத்தினால் நான்கிலிருந்து ஆறு மாதத்துக்குள் சரியாகிவிடும். கொழுப்பு காரணமாக உருவான மஞ்சள் காமாலை என்றால் அதிகக் கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்த்து, உடற்பயிற்சிகள் செய்தால் பாதிப்பைக் குறைக்க முடியும்.

கல்லீரலுக்குத் தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும் ஆற்றல் இருக்கிறது. இருந்தாலும், அது பாதிக்கப்பட்டிருக்கும்போது மேலும் பாதிப்பை அதிகரிக்கக்கூடிய எந்தச் செயலையும் செய்யாமல் இருக்க வேண்டும். முறையான மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றினால் மஞ்சள் காமாலை பாதிப்பிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம்" என்கிறார் மருத்துவர் விவேகானந்தன்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

மனித உடலில் சருமத்துக்கு அடுத்த மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்தான். உடலில் வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத தனிச்சிறப்பு இதற்கு உண்டு. அது, நோய்த்தொற்றோ, பாதிப்போ ஏற்பட்டால், அதைத் தானாகவே சரிசெய்துகொள்ளு... மேலும் பார்க்க

தினமும் நெல்லிக்காய் சாறு குடிக்கலாமா? - எச்சரிக்கும் மருத்துவர்கள்

`ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும்' என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. இந்த `ஒரு நாளைக்கு ஒன்று' பழக்கம் நெல்லிக்காய்க்கும் பொருந்தும். தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் `மலச்சிக்கல் நீங்கும்... மேலும் பார்க்க

Doctor Vikatan: வொர்க் அவுட் செய்கிற எல்லோருக்கும் புரோட்டீன் பவுடர் தேவையா?

Doctor Vikatan:ஜிம்மில் வொர்க் அவுட் செய்கிற எல்லோருக்கும் புரோட்டீன் பவுடர் தேவையா, எந்த மாதிரி பயிற்சிகள் செய்வோர் புரோட்டீன் பவுடர் சாப்பிட வேண்டும்?யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்,வே புரோட்டீன் என்பத... மேலும் பார்க்க

மன அழுத்தம் வந்தால் பற்களைக் கடிக்கிறீர்களா? இதை படிங்க!

மன அழுத்தத்தால் உடல் நலமும் பாதிப்படையும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பற்களும் பாதிப்படையும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஹேமா மாலதி. ''கோபத்தில் இருக்கும்போது நம்மை அறியாமல் நம... மேலும் பார்க்க

சீர்காழி: அரசு மருத்துவமனையில் ஊசி போட்டதும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல்நல பாதிப்பு - நடந்தது என்ன?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசின் தாய் சேய் நல மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 27 கர்ப்பிணிகள் மற்றும் 20 பிரசவித்த தாய்மார்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந... மேலும் பார்க்க

கேரளா: மூளையை தின்னும் அமீபா: 19 மரணம், 71 பேருக்கு சிகிச்சை- சுகாதாரத்துறை அமைச்சர் சொல்வது என்ன?

மூளையை தின்னும் அமீபா நோய் என அறியப்படும் ப்ரைமரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் தொற்று கேரளாவில் பரவிவருகிறது. கோழிக்கோட்டில் பிறந்து 3 மாதமே ஆன குழந்தை மூளையை தின்னும் அமீபா தாக்கி மரணமடைந்த சம்பவம்... மேலும் பார்க்க