செய்திகள் :

சீர்காழி: அரசு மருத்துவமனையில் ஊசி போட்டதும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல்நல பாதிப்பு - நடந்தது என்ன?

post image

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசின் தாய் சேய் நல மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 27 கர்ப்பிணிகள் மற்றும் 20 பிரசவித்த தாய்மார்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சையில் இருக்கும் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டுள்ளது.

இதை அடுத்து 9 கர்ப்பிணிகள் மற்றும் 18 பிரசவித்த தாய்மார்கள் என 27 பேருக்கு நடுக்கத்துடன் காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அச்சமும், பரபரப்பும் ஏற்பட்டது.

சீர்காழி அரசு மருத்துவமனை

இதுகுறித்து தகவல் அறிந்த தலைமை மருத்துவர் அருண் ராஜ்குமார் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் விரைந்து வந்து மாற்று மருந்து செலுத்தினர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் குணமடைந்தனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் கர்ப்பிணி ஒருவர் மட்டும் உடல்நிலை சரியாகாமல் இருக்க அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் அரசு தாய், சேய் நல மையத்தில் சிகிச்சை பெறும் பெண்களின் குடும்பத்தினர் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சீர்காழி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், சீர்காழி அரசு ஆய்வு செய்த மையத்தில் ஆய்வு நடத்தியதுடன், பாதிக்கப்பட்ட பெண்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து சீர்காழி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அருண் ராஜ்குமார் மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை அளித்துள்ளார்.

இந்நிலையில், நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பானுமதி தலைமையில் 5 டாக்டர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, சந்தேகத்திற்கிடமான மருந்துகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மருந்து கொடுத்த பிறகு உடல் நிலை பாதிப்பு

மேலும் ஆய்வு முடிவு வரும் வரை சீர்காழி அரசு மருத்துவமனையில் தற்போது இருப்பு உள்ள நோய் எதிர்ப்பு மருந்தை நோயாளிகளுக்கு செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மருந்து செலுத்தப்பட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட அனைவரது உடல்நிலை சீராக இருப்பதாக அரசு தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிலர் கூறுகையில், "கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மருந்து கொடுக்கப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அனைவருக்கும் மாற்று மருந்து கொடுத்தனர்.

அதன் பிறகும் உடல்நிலை சீராகாதவர்கள் மயிலாடுதுறை மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

கேரளா: மூளையை தின்னும் அமீபா: 19 மரணம், 71 பேருக்கு சிகிச்சை- சுகாதாரத்துறை அமைச்சர் சொல்வது என்ன?

மூளையை தின்னும் அமீபா நோய் என அறியப்படும் ப்ரைமரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் தொற்று கேரளாவில் பரவிவருகிறது. கோழிக்கோட்டில் பிறந்து 3 மாதமே ஆன குழந்தை மூளையை தின்னும் அமீபா தாக்கி மரணமடைந்த சம்பவம்... மேலும் பார்க்க

Doctor Vikatan: நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது, தோற்றம் மாறுவது ஏன்?

Doctor Vikatan:நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது ஏன். அவர்களது தோற்றமே நீரிழிவு வந்ததைக் காட்டிக் கொடுக்கிறதே, அது ஏன். நீரிழிவு வந்தால் ஆரோக்கியமான தோற்றம் சாத்தியமில்லையா?பதில் சொல்கிறார், சென... மேலும் பார்க்க

Men' Health: `ஆண் பாலியல் ஹார்மோன்' சுரப்பை அதிகப்படுத்தும் உணவுகள்

''மலட்டுத்தன்மைக்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இன்றைய தலைமுறையினரிடம் அதிகரிக்கும் தவறான உணவுப்பழக்கம்தான் முக்கியக் காரணம். அது, ஆண்களின் பாலியல் ஹார்மோனான `டெஸ்டோஸ்டீரான்’ சுரப்பை பாதித்து, தந... மேலும் பார்க்க

IKIGAI : ஜப்பானியர்கள் போல நாமும் 100 ஆண்டு வாழலாமா?

நூறு வயது வரை வாழ வேண்டும் என்கிற ஆசை நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். இந்த ஆசை, ஜப்பானில் இருக்கிற ஒகினாவா (Okinawa) தீவு மக்களை பொறுத்தவரை கடந்த பல வருடங்களாக நிஜமாகிக்கொண்டே இருக்கிறது. உலக... மேலும் பார்க்க

Doctor Vikatan: கழுத்தில் படிந்திருக்கும் கருமை, நீரிழிவின் அறிகுறியாக இருக்குமா?

Doctor Vikatan: என் வயது 26. கடந்த சில வருடங்களாக எனக்கு கழுத்தைச் சுற்றி கருமையான படலம் இருக்கிறது. நான் அது சருமம் தொடர்பான பிரச்னை என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அது நீரிழிவின்அறிகுறியாகஇருக்க... மேலும் பார்க்க

சீரகத்தண்ணீர் & தனியா தண்ணீர்: என்ன பலன்; யார், எவ்வளவு அருந்தலாம்? - சித்த மருத்துவர் விளக்கம்!

சோஷியல் மீடியாவில் 'டீடாக்ஸ் வாட்டர்' என்றாலே, வெள்ளரி, எலுமிச்சை, புதினா சேர்த்து அழகான கண்ணாடி பாட்டிலில் ஊற்றி குடிப்பதுதான் ட்ரெண்டிங். இதையே தயாரிப்பதுபோல வீடியோ போட்டால் லைக்ஸ் பிச்சுக்கும். சரி... மேலும் பார்க்க