செய்திகள் :

ஆஸி. மகளிரணியின் வரலாற்றிலேயே மிக மோசமான தோல்வி!

post image

ஆஸ்திரேலிய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்திய மகளிரணிக்கு எதிரான போட்டியில் ஆஸி. மகளிரணி 102 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சண்டீகரில் நேற்று (செப். 17) நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்து 49.5 ஓவர்களில் 292 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 

அடுத்து விளையாடிய ஆஸி. அணி 40.5 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதுவரை, ஆஸி. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே இவ்வளவு மோசமாக தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகமுறை ஒருநாள் உலகக் கோப்பை வென்ற அணியின் இந்தத் தோல்வி ஆஸி. ரசிகர்களை கலக்கமடையச் செய்துள்ளது.

ஆஸி. மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டின் மோசமான தோல்விகள்

  • 102 ரன்கள் வித்தியாசத்தில் - இந்தியாவுக்கு எதிராக, 2025

  • 92 ரன்கள் வித்தியாசத்தில் - இங்கிலாந்துக்கு எதிராக, 1973

  • 88 ரன்கள் வித்தியாசத்தில் - இந்தியாவுக்கு எதிராக, 2004

  • 84 ரன்கள் வித்தியாசத்தில் - தெ.ஆ. எதிராக, 2024

  • 82 ரன்கள் வித்தியாசத்தில் - நியூசிலாந்துக்கு எதிராக, 2008

Australia's 102-run loss to India in the second one-dayer in New Chandigarh was their heaviest by runs, and a 52-year low

எந்த அணியையும் குறைத்து மதிப்பிட மாட்டோம், ஆனால்... இலங்கை அணியின் கேப்டன் கூறுவதென்ன?

எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிட மாட்டோம் என இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்க... மேலும் பார்க்க

நேபாளத்துக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு!

நேபாளத்துக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நேபாள அணிகள் தங்களுக்குள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளை... மேலும் பார்க்க

ஆசிய கோப்பையை வெல்வதே ஆப்கன் மக்களின் வலிக்கான மருந்து: ஆப்கன் வீரர்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று ஆப்கானிஸ்தான் மக்களிடம் மகிழ்ச்சியை கொண்டுவர விரும்புவதாக ஆப்கானிஸ்தான் வீரர் குல்பதீன் நைப் தெரிவித்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவி... மேலும் பார்க்க

மிடில் ஆர்டரில் கவனம் தேவை, இந்தியாவின் சவாலுக்குத் தயார்: பாகிஸ்தான் கேப்டன்

பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா யுஎஇ போட்டிக்குப் பிறகு பேட்டியளித்துள்ளார். இந்த சிறப்பான வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்தச் சுற்றில் இந்தியாவுடனும் ம... மேலும் பார்க்க

இலங்கை உடன் பலப்பரீட்சை: வாழ்வா? சாவா? நிலையில் ஆப்கானிஸ்தான்!

ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றுக்கான கடைசி வாய்ப்பில் இலங்கை அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் இன்றிரவு மோதுகின்றன. குரூப் பி பிரிவில் இன்னும் ஓர் அணியும் அடுத்த சூப்பர் 4 சுற்றுக்குத் தேர்வாகவில்லை என்ப... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கேப்டனிடம் நடுவர் மன்னிப்பு: என்னதான் நடந்தது?

பாகிஸ்தான் கேப்டனிடம் நடுவர் ஆன்டி பைகிராஃப்ட் மன்னிப்பு கேட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி நேற்றிரவு யுஎஇ உடன் விளையாடியது. இந்நிலையில், பைகிராஃப்ட் மன்னிப்பு கேட்கவில்லை எனவும் நடுவரி... மேலும் பார்க்க