செய்திகள் :

ஆசிய கோப்பையை வெல்வதே ஆப்கன் மக்களின் வலிக்கான மருந்து: ஆப்கன் வீரர்

post image

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று ஆப்கானிஸ்தான் மக்களிடம் மகிழ்ச்சியை கொண்டுவர விரும்புவதாக ஆப்கானிஸ்தான் வீரர் குல்பதீன் நைப் தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அபு தாபியில் இன்று (செப்டம்பர் 18) நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்தப் போட்டி மிகவும் முக்கியமான போட்டியாகும்.

இந்த நிலையில், நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் மக்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதற்காக ஆசிய கோப்பையை வெல்ல விரும்புவதாக அந்த அணியின் ஆல்ரவுண்டர் குல்பதீன் நைப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிக அளவிலான மக்கள் உயிரிழந்தனர். அதனை நினைக்கும்போது, மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் அதிக அளவிலான வசதிகள் கிடையாது. அதனால், இதுபோன்ற துயரமான நிகழ்வுகள் மிகுந்த வேதனையளிப்பதாக இருக்கிறது. ஆனால், இந்த ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றால், நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள். நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு ஆசிய கோப்பையை வென்று எங்களால் முடிந்த சிறிதளவு மகிழ்ச்சியை அவர்களுக்கு தர விரும்புகிறோம் என்றார்.

ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், சுமார் 2,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Afghan player Gulbadin Naib has said that he wants to bring happiness to the people of Afghanistan by winning the Asia Cup.

இதையும் படிக்க: இலங்கை உடன் பலப்பரீட்சை: வாழ்வா? சாவா? நிலையில் ஆப்கானிஸ்தான்!

நேபாளத்துக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு!

நேபாளத்துக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நேபாள அணிகள் தங்களுக்குள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளை... மேலும் பார்க்க

ஆஸி. மகளிரணியின் வரலாற்றிலேயே மிக மோசமான தோல்வி!

ஆஸ்திரேலிய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்திய மகளிரணிக்கு எதிரான போட்டியில் ஆஸி. மகளிரணி 102 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு... மேலும் பார்க்க

மிடில் ஆர்டரில் கவனம் தேவை, இந்தியாவின் சவாலுக்குத் தயார்: பாகிஸ்தான் கேப்டன்

பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா யுஎஇ போட்டிக்குப் பிறகு பேட்டியளித்துள்ளார். இந்த சிறப்பான வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்தச் சுற்றில் இந்தியாவுடனும் ம... மேலும் பார்க்க

இலங்கை உடன் பலப்பரீட்சை: வாழ்வா? சாவா? நிலையில் ஆப்கானிஸ்தான்!

ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றுக்கான கடைசி வாய்ப்பில் இலங்கை அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் இன்றிரவு மோதுகின்றன. குரூப் பி பிரிவில் இன்னும் ஓர் அணியும் அடுத்த சூப்பர் 4 சுற்றுக்குத் தேர்வாகவில்லை என்ப... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கேப்டனிடம் நடுவர் மன்னிப்பு: என்னதான் நடந்தது?

பாகிஸ்தான் கேப்டனிடம் நடுவர் ஆன்டி பைகிராஃப்ட் மன்னிப்பு கேட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி நேற்றிரவு யுஎஇ உடன் விளையாடியது. இந்நிலையில், பைகிராஃப்ட் மன்னிப்பு கேட்கவில்லை எனவும் நடுவரி... மேலும் பார்க்க

சூப்பர் 4 சுற்றில் இந்தியா உடன் மோதும் பாகிஸ்தான்..! எகிறும் எதிர்பார்ப்பு!

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி யுஎஇ அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி மீண்டும் இந்தியாவுடன் சூப்பர் 4 சுற்றில் விளையாட இருக்கிறது. நே... மேலும் பார்க்க