செய்திகள் :

மதுரையில் லாரி - பேருந்து மோதி விபத்து

post image

மதுரையில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது வேகமாக வந்த தனியார் பயணிகள் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை விமான நிலையம் அருகே வெளிப்புற வட்டச்சாலையில் வேகமாக வந்த பேருந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியதில் இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் பேருந்து இந்த விபத்தில் சிக்கியதாகவும் இதில், பேருந்தில் இருந்த 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர். வயதான பெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்துக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்க முடியாமல், கிரேன் வரவழைக்கப்பட்டு, கிரேன் உதவியோடு பேருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அதில் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேருந்து ஓட்டுநர் அதிவேகமாக பேருந்தை இயக்கியதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. பேருந்து மோதிய வேகத்தில், சாலையோரம் நின்றிருந்த லாரி, அதன் முன் நிறுத்தப்பட்டிருந்த காரை இடித்ததில், கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

ஏப். 30 வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: அப்பாவு

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்... மேலும் பார்க்க

பட்ஜெட் ஒளிபரப்பப்பட்ட எல்இடி திரையில் ஆங்கிலத்தில் ஒளிபரப்பான சீமான் பேட்டி!

கோயம்புத்தூரில் பட்ஜெட் ஒளிபரப்பப்பட்ட எல்இடி திரையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் செய்தியாளர் சந்திப்பு ஆங்கில மொழியில் ஒளிபரப்பட்டதால் மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.தமிழ்நா... மேலும் பார்க்க

வரம்புக்குள்தான் தமிழக அரசின் கடன் உள்ளது: உதயசந்திரன்

மாநிலங்களின் கடன் வாங்கும் வரம்புக்குள்தான் தமிழக அரசின் கடன் உள்ளது என்று நிதித் துறை செயலர் உதயசந்திரன் கூறியுள்ளார்.வரும் 2025-26ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பேரவையில் இன்று தா... மேலும் பார்க்க

குறியீடு முக்கியமல்ல: ப.சிதம்பரம் கருத்து

சிவகங்கை: முதல் குறியீடு முக்கியமில்லை. அதற்குப் பின்னால் வரும் எண்கள்தான் முக்கியம். எனவே, அதை பெரிய விஷயமாக்க வேண்டியதில்லை என முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்தார். சிவகங்க... மேலும் பார்க்க

உதகை ரேஸ் கோர்ஸ் பகுதியில் சுற்றுச்சூழல் பூங்கா: பட்ஜெட்டில் அறவிப்பு

தமிழக நிதிநிலை அறிக்கையில் சுற்றுலாத் துறைக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பில், ஒரு டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை தமிழ்நாடு அடைவதற்க... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம், இதர செலவுக்கு மாநில அரசின் நிதி ஒதுக்கீடு!

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம், மாணவர்களின் செலவுக்கு மாநில அரசு தரப்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்காததால், மாநில அர... மேலும் பார்க்க