செய்திகள் :

ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை: உயர்நீதிமன்றம் உறுதி

post image

விதிகளை மீறி வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜவாஹிருல்லா உள்பட ஐந்து பேரின் சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கடந்த 1997-2000 ஆம் ஆண்டுகளில், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசிடம் முறையாக அனுமதி பெறாத சங்கத்தின் மூலம் வெளிநாட்டில் இருந்து ரூ.1.54 கோடி வரை பணம் பெற்றது தொடர்பாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகிகள் எஸ்.ஹைதர் அலி, சையது நிஷார் அகமது மற்றும் நல்லா முகமது களஞ்சியம், ஜி.எம்.ஷேக் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம், ஜவாஹிருல்லா, எஸ்.ஹைதர் அலிக்கு ஓராண்டும், சையது நிஷார் அகமது, நல்லா முகமது களஞ்சியம், ஜி.எம்.ஷேக் ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தது. மேலும், அனைவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜவாஹிருல்லா உள்பட 5 பேரும் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், கீழமை நீதிமன்றத்தில் தண்டனையை உறுதி செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் தண்டனையை நிறுத்தி வைக்க கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், ஒரு மாதத்துக்கு தீர்ப்பு அமல்படுத்துவதை நிறுத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தொடங்கிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் வருகிற மார்ச். 18 அன்று நடத்தப்... மேலும் பார்க்க

நெல்லை - திருச்செந்தூர் ரயில் 25 நாள்களுக்கு ரத்து

ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக நெல்லை - திருச்செந்தூர் - நெல்லை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் 25 நாள்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

ஒரு ரூபாயில் தமிழகத்தின் வரவு - செலவு கணக்கு!

தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழக அரசுக்கு வரும் வருவாய் மற்றும் எந்தெந்த செலவினங்களுக்கு எவ்வளவு செலவிடப்படுகிறது என்பது தொடர்பான விளக்கம் இன்று வெளியாகி... மேலும் பார்க்க

மீண்டும் உயர்ந்த தங்கம்: இன்றைய விலை நிலவரம் என்ன?

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்த தங்கத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இன்று(வெள்ளிக்கிழமை) காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.560 உயர்ந்துள்ளது. ... மேலும் பார்க்க

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் யாருக்கு? மட்சுவோ பாஷோ யார்?

சென்னை: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் தமிழக பட்ஜெட்டில் இன்று அறிவிக்கப்பட்டது.பெற்றோரை இழந்து, வறிய நிலையில், உறவினர்களின் பராமரிப்பில் இருக்கும் குழ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் தாயுமானவர் முதல்வர் - அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 46,767 கோடி ஒதுக்கியுள்ளார் தமிழ்நாட்டின் தாயுமானவர் முதல்வர் என்று அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள... மேலும் பார்க்க