செய்திகள் :

மதுரை: மேயர் இந்திராணி ராஜினாமா!

post image

மதுரை மாநாகராட்சியில் பல கோடி ரூபாய் வரி முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசரணையை தொடங்கியது.

இந்த வழக்கில் மாநகராட்சி பில் கலெக்டர், வருவாய் உதவியாளர், முன்னாள் உதவி கமிஷனர் என 13 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மதுரை மேயர் இந்திராணி
மதுரை மேயர் இந்திராணி

5 மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் என 7 பேர் ராஜினாமா செய்திருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம்.

இதற்கிடையில், வரிவிதிப்புகுழு தலைவர் பதவியை ராஜினாமா செய்த தி.மு.க. கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், ஒப்பந்த ஊழியர் செந்தில்பாண்டி ஆகியோர் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டனர்.

கண்ணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மதுரை மாநகராட்சி மேயரான இந்திராணியின் கணவர் பொன்வசந்த், தி.மு.க., கவுன்சிலர்கள் 3 பேர், அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் ஆகியோர் விசாரிக்கப்படவேண்டியவர்கள் என வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர்.

தலைமறைவாக இருந்த பொன்வசந்த் 12-ம் தேதி இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்தான், மேயர் பதவியை இந்திராணி ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தனது குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மதுரை மாநகராட்சியில் நடந்த முறைகேடு குறித்து தோண்டத் தோண்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளதால் இன்னும் பலர் சிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

``இந்தி மொழிக்கு தடையா? வதந்திகளைப் பரப்பாதீர்கள்" - TN Fact check

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களிலும், இந்தி மொழி பேசாத மாநிலங்களிலும் மத்திய பா.ஜ.க அரசு இந்தி மொழியை திணிப்பதாக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணிக்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில், இரு... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "தனிநபர் மீது பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை" - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 2-ம் நாள் அமர்வு இன்று நடைபெற்றது. இதில் கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விவாதங்கள்தான் அனலாகப் பறந்தன.இன்று சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித... மேலும் பார்க்க

``கரூர் சம்பவத்தில் விரைவாக உடற்கூராய்வு நடத்தியது ஏன்?'' - இபிஎஸ் கேள்விக்கு அமைச்சர் மா.சு பதில்

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 2-ம் நாள் அமர்வு இன்று நடைபெற்றது. இதில் கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விவாதங்கள்தான் அனலாகப் பறந்தன. எதிர்கட்சித் தலைவர் அதிமுக எடப்பாடி ... மேலும் பார்க்க

தீபாவளி விடுமுறை: "தென் மாவட்டங்களுக்கு பகல் நேர முன்பதிவில்லாத மெமு ரயில்கள்" - பயணிகள் கோரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்குப் பகல் நேர, முன்பதிவில்லாத சேர் கார் வசதி கொண்ட மெமு (Memu) சிறப்பு ரயில்களை இயக்க வேண்டுமென பொது மக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தீபாவ... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: நீதிபதி குறித்து அவதூறு பதிவிட்ட தவெக நிர்வாகிக்கு ஜாமீன் - நீதிமன்றம் உத்தரவு

தமிழக வெற்றி கழகத்தின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் நிர்மல்குமார். இவர் கரூர் சம்பவத்தில் 41 பேர் இறந்துபோன வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமாரையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும்... மேலும் பார்க்க

சிவகாசி: "மேயர் போட்டோ ஷூட் நடத்துவதில்தான் ஆர்வமாக இருக்கிறார்" - திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் 3 மாதங்களுக்குப் பிறகு மாமன்றக் கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் துணை மேயர் பிரியா, ஆணையர் சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள்... மேலும் பார்க்க