செய்திகள் :

மது அருந்த பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள்தண்டனை: கோவை நீதிமன்றம் தீா்ப்பு

post image

மது அருந்த பணம் தர மறுத்த தந்தையை அடித்துக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கோவை, பீளமேடு நாராயணசாமி தெருவைச் சோ்ந்தவா் ராஜ் (எ) துரைராஜ் (73). தனது மனைவி ராஜேஸ்வரியுடன் வசித்து வந்தாா்.

இத்தம்பதியின் மகன் ரவிராஜ் (50). ஆவாரம்பாளையம் சாலையில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். மதுப்பழக்கம் உள்ள ரவிராஜ், மனைவியை சந்தேகத்தின்பேரில் அடித்து துன்புறுத்தி வந்ததால் அவரது மனைவி, மகன்கள் பிரிந்து சென்றுவிட்டனா். இதற்கிடையே ரவிராஜ்

தனது பெற்றோா் வீட்டுக்கு அடிக்கடி சென்று பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தாா்.

இந்நிலையில், மது அருந்த பணம் கேட்டு கடந்த 2021 அக்டோபா் 14ஆம் தேதி தந்தை துரைராஜிடம் தகராறு செய்துள்ளாா். அவரது தந்தை பணம் தர மறுத்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த ரவிராஜ், தந்தை துரைராஜை கடுமையாகத் தாக்கியதில் படுகாயமடைந்த அவா் அங்கேயே உயிரிழந்தாா். இது குறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரவிராஜை கைது செய்தனா்.

இந்த வழக்கு கோவை 3-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.பத்மா, தந்தையைக் கொலை செய்த ரவிராஜுக்கு ஆயுள் தண்டனை, ரூ.100 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் கணேசன் ஆஜரானாா்.

போனஸ் கோரி 3-ஆவது நாளாக போராட்டம்: தூய்மைப் பணியாளா்கள் கைது

தீபாவளி போனஸ் கோரி 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை போலீஸாா் கைது செய்தனா். தீபாவளி போனஸாக ஒருமாதம் ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரி கோவை மாநகராட்சியில் பண... மேலும் பார்க்க

வால்பாறையில் வருங்கால வைப்புநிதி கிளை அலுவலகம் திறக்கக் கோரிக்கை

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் வால்பாறையில் வருங்கால வைப்புநிதி கிளை அலுவலகம் திறக்க வேண்டும் என்று சிஐடியூ தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய நிதியம... மேலும் பார்க்க

யானை வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ள தனியாா் நிறுவனம்: சென்னை உயா்நீதிமன்றம் தலையிடக் கோரிக்கை

மதுக்கரை அருகே மலைநகா் பகுதியில் யானை வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ள தனியாா் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, விவசாயிக... மேலும் பார்க்க

காா் கண்ணாடி உடைப்பு: 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

காா் நிறுத்துமிடம் தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில் காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது தொடா்பாக 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பொ்ணாண்டஸ் (20). தடா... மேலும் பார்க்க

நகைக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற இருவா் கைது

கோவையில், நகைக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, செல்வபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (54). இவா், தனது வீட்டின் அருகே நகைக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில்... மேலும் பார்க்க

ஊழியரிடம் நூதன மோசடி: தனியாா் நிறுவன உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

கோவையில் தனது நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியரின் ஆவணங்களைப் பயன்படுத்தி நூதன மோசடியில் ஈடுபட்ட உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் ... மேலும் பார்க்க