செய்திகள் :

மயிலாடுதுறை: விகடன் செய்தி எதிரொலி; பள்ளியில் ஆண்களுக்கு தனி கழிவறை அமைக்க நிதி ஒதுக்கிய ஆட்சியர்

post image

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரிவேளூர் ஊராட்சி பூங்குடி கிராமத்தில் 1952-ல் தொடக்கபள்ளி ஒன்று தொடங்கப்பட்டு, அன்று முதல் இன்று வரை அப்பகுதி மக்களின் தொடக்கல்வியின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

தற்போது இப்பள்ளியில் பூங்குடி மற்றும் தோப்புத்தெரு பகுதியைச் சேர்ந்த 34 மாணாக்கர்கள் கல்வி பயிலுகின்றனர். இதில் 20பேர் ஆண்கள் மற்றும் 14 பேர் பெண்கள்.

இந்த நிலையில் இப்பள்ளியில் ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் தனித்தனியே கழிவறைகள் இல்லாதது பற்றியும், அப்பள்ளி குழந்தைகளின் அசௌகரியமான மனநிலையை பற்றிய பெற்றோர்களின் வேதனைகள் குறித்தும், கடந்த 03/10/2025 இல் விகடனில் "பொம்பள புள்ளைங்க உடனே போக முடியல" - பெண்கள் கழிவறை இல்லாமல் அவதியுறும் பள்ளி மாணவிகள்" என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியீடு செய்தோம்.

செய்தி உடனடியாக அந்த ஊர் மக்கள் கவனத்திற்கும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் நேரடி கவனத்திற்கும் சென்றது.

மேலும் அந்த செய்தியின் எதிரொலியாக தற்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரால் அப்பள்ளியில் ஆண்களுக்கான தனி கழிவறை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளியிலுள்ள கழிப்பறை
பள்ளியிலுள்ள கழிப்பறை

இதுக்குறித்து கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாக்சன் கூறியதாவது, "இச்செய்தியானது அரசு அதிகாரிகளின் மூலம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பிறகு மாவட்ட ஆட்சியர் அப்பள்ளியை ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப உத்தரவிட்டார். ஆய்வில் இருபாலருக்கும் தனித்தனி கழிவறைகள் இல்லாதது உறுதி செய்யப்பட்டது.

அறிக்கையானது மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஆண்களுக்கு தனி கழிவறை அமைக்க மாவட்ட ஆட்சியர் ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.5,25,000 ஒதுக்கீடு செய்துள்ளார். இன்னும் ஒரு வாரங்களில் டெண்டர் விட்டப்பட்டு கழிவறை கட்டும் பணி தொடங்கும்" என்றார்.

இதுக்குறித்து அப்பள்ளி மாணவர்களின் பெற்றோரிடம் பேசியபோது, "பாவம் சின்ன பசங்க‌ பாத்ரூம் போறத்துக்கே ரொம்ப செரமபட்டாங்க. எங்கள்ட வந்து சொல்றப்ப எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும்.

எங்களுக்கு தெரிஞ்சதெலாம் கிராம சபா கூட்டத்துல சொல்றது மட்டும் தான். நாங்களும் எத்தனையோ வாட்டி சொன்னோம். அதுக்கெல்லாம் இங்க பலன் இல்லாமா போயிடுச்சி. இப்ப விகடன் செய்தி வந்தது பாத்துட்டு கலெக்டர் கட்ட சொல்லி இருக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

நிதி ஒதுக்குன கலெக்டருக்கும், செய்தி வெளியிட்ட விகடனுக்கும் ரொம்ப நன்றி. அங்க படிக்கிற குழந்தங்களை மனசுல வச்சி தரமான முறையில கழிவறை கட்ட வேண்டும்" என்றனர்.

TN Assembly - Karur விவகாரம் காரசார விவாதம்! | MK STALIN EPS VIJAY TVK DMK ADMK | Imperfect Show

* சட்டப்பேரவைக்கு கருப்புப் பட்டை அணிந்து வந்த அதிமுகவினர் - சபாநாயகரும், அமைச்சரும் கொடுத்த ரியாக்க்ஷன்* “காவல்துறைக்கு சல்யூட் எனக் கூறிவிட்டுதான் அந்த கட்சியின் தலைவர் பேச்சையே தொடங்கினார்”பேரவையில... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: ''சிபிஐ விசாரணை மூலம் பல உண்மைகள் வெளிவரும்''- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

மத்திய மீன் வளத்துறை அமைச்சர் எல்.முருகன் இன்று ராமேஸ்வரம் வந்திருந்தார். இங்குள்ள காஞ்சி சங்கராச்சாரியர் மடத்தில் சிறப்பு யாக பூஜை நடத்திய பின் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இ... மேலும் பார்க்க

ஆந்திராவில் Google AI Hub திட்டம்; "ஆனால் நம்ம முதல்வர் இந்தியைத் தடை செய்ய முயல்கிறார்" - அண்ணாமலை

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பங்களிக்கும் அடுத்த கட்ட பாய்ச்சலாக, கூகுளின் 'Google AI hub data centre'ஐ ஆந்திர மாநில விசாகப்பட்டினத்தில் பெரிய அளவில் கட்டமைக்கத் ... மேலும் பார்க்க

`உங்கள் மீது வரி விதிப்பேன்' - பொங்கும் ட்ரம்ப்; ஓரணியில் இந்தியா, பிரேசில், சீனா? - என்ன நடக்கிறது?

அமெரிக்க கருவூல அலுவலகத்தின் லேட்டஸ்ட் தரவுகளின்படி, இந்தியா, பிரேசில், சீனா மற்றும் இன்னும் சில நாடுகள் தொடர்ந்து அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் இருப்புகளைக் குறைத்து வருகின்றன. இது கடந்த ஆண்டு ஜூலை... மேலும் பார்க்க

`பொண்டாட்டிகளையும் இலவசமாக தருவார்கள் என்கிறார்!’- சி.வி.சண்முகத்தை வறுத்தெடுத்த அமைச்சர் கீதா ஜீவன்

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அரசின் இலவசத் திட்டங்களோடு பெண்களையும் ஒப்பிட்டு அருவருக்கத்தக்க ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார் ... மேலும் பார்க்க