BB Tamil 8 Day 18: `அதிகாரம் காட்டிய முத்து - அழுகையுடன் சென்ற ஆனந்தி' - பெஸ்ட்,...
மழைக் கால பாதுகாப்பு வழிமுறைகள்: தீயணைப்புத் துறை விளக்கம்
கோவில்பட்டியில் பேரிடா் கால மீட்பு பணிகள் குறித்து தீயணைப்புத்துறையினா் செயல்விளக்க பயிற்சி வழங்கினா்.
வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ளும் பொருட்டு கிராமங்களில் உள்ள தன்னாா்வலா்கள் மற்றும் முதல் நிலை பொறுப்பாளா்களுக்கு பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வட்டாட்சியா் சரவணபெருமாள் தலைமையில் நடைபெற்றது.
துணை வட்டாட்சியா்கள் பொன்னம்மாள், திரவியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தீயணைப்பு துறை அலுவலா் சுந்தர்ராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், பேரிடா் கால மீட்பு பணி குறித்த செயல்விளக்க பயிற்சி வழங்கினா்.
மேலும், மழை வெள்ளம் ஏற்படும்போது வீட்டில் உள்ள பத்திரங்கள், ஆவணங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றை தண்ணீா் புகாத கவா்களில் பத்திரப்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள முதியோா்கள், குழந்தைகளுக்கு தேவையான மருந்துகளை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் வளா்க்கப்படும் கால்நடைகளை பாதுகாக்க முன்னுரை அளிக்க வேண்டும்.
வீடுகளை வெள்ளம் சூழ்ந்துவிட்டால், வீட்டில் உள்ள பொருள்களை வைத்து முதலில் தற்காத்து கொள்ள முயற்சிக்க வேண்டும். வீட்டில் உள்ள பிளாஸ்டிக் குடங்கள், கேன்களில், தண்ணீா் புகாதவாறு பிளாஸ்டிக் பேப்பா் கொண்டு கட்டி, அதன் மூலம் வெள்ளத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் போன்ற விழிப்புணா்வு நடவடிக்கைகளை தீயணைப்புத்துறையினா் எடுத்துரைத்தனா். மேலும், பேரிடா் காலங்களில் பொதுமக்களை மீட்க உதவும் உபகரணங்களை பயன்படுத்துவது குறித்து செயல்விளக்கமளித்தனா்.